வடித்த சாதம் - 2 கப், நல்லெண்ணெய் - 5 ஸ்பூன், வேர்க்கடலை - 1/2 கப், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன், எள்ளு -1 tbsp, கடலைப்பருப்பு - 1 ஸ்பூன், கடுகு - 1 tsp, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தே.அ.
காய்ந்ததும் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்கு வறுத்துக்கொள்ளுங்கள். அவற்றை தனியா வைத்துவிட்டு எள்ளை மட்டும் தனியாக மீண்டும் வறுத்துக்கொள்ளுங்கள்.
இவை ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது வேர்க்கடலை சாதப்பொடி தயார். இதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக அதே கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளியுங்கள்.
கடலைப்பருப்பு பொன்னிறமாக வந்ததும் வடித்த சாதம் சேர்த்து அதன் மேல் அரைத்த வேர்க்கடலைப் பொடியையும், உப்பையும் சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளுங்கள்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்