சண்டே மெனு: சும்மா சுருக்குன்னு நாட்டுக் கோழி குழம்பு!

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி - 1 கிலோ (சிறு துண்டுகளாக நறுக்கியது), சின்ன வெங்காயம் - 15-20 (பொடியாக நறுக்கியது), தக்காளி - 2 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 2 (கீறியது), இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் - 2 ஸ்பூன், தனியா தூள் - 3 ஸ்பூன், சீரகத்தூள் - 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை - 2 கொத்து, கொத்தமல்லி இலை - சிறிது (நறுக்கியது), எண்ணெய் - 3 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய் பால் - 1/2 கப் (விருப்பப்பட்டால்).

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

நறுக்கிய நாட்டுக்கோழி துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேக விடவும்.

குழம்பு ஆறியதும், தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

அவ்வளவு தான்....

சுட சுட நாட்டுக்கோழி குழம்பு தயார்!

மேலும் அறிய