மழை நேரத்துக்கு ஏற்ற ரசம்... வெறும் 5 நிமிசத்துல ரெடி!

தேவையான பொருட்கள்

தக்காளி - 1 (பெரியது மற்றும் நறுக்கியது), பச்சை மிளகாய் - 1, துவரம் பருப்பு - 1/2 கப் (வேக வைத்து ஓரளவு நன்கு மசித்தது), புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன், பூண்டு - 5 பற்கள், ரசப் பொடி - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, சர்க்கரை - 1 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிது, எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன், வரமிளகாய் - 1.

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் அவற்றுடன் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

தொடர்ந்து அவற்றுடன் உப்பு, சர்க்கரை மற்றும் ரசப்பொடி சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்

அதன்பின் தண்ணீர், புளிச்சாறு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு அதில் முன்னர் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.

இப்போது கொத்தமல்லி தழைகளை தூவி இறக்க வேண்டும்

நீங்கள் எதிர்பார்த்த சுவையான மற்றும் ஆரோக்கியமான பருப்பு ரசம் தயார்!

இவற்றை சூடான சாதத்துடன் சேர்த்து ருசித்து மகிழவும்.

மேலும் அறிய