வாழ்நாள் முழுவதும் மரத்தில் தான் இருக்கும்... இந்த உயிரினங்கள் பற்றி தெரியுமா?

ஸ்லாத்து (Sloth)

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் ஸ்லாத்து விலங்கு மிகவும் மெதுவாக நகரும். இவை மரக்கிளைகளில் தொங்கியே தூங்கும், தினமும் 20 மணி நேரம் வரை ஓய்வெடுக்கும்.

ஒராங்குடான் (Orangutan)

போர்னியோ மற்றும் சுமாத்திரா காடுகளில் வாழும் இந்த பெரிய குரங்குகள் மரங்களில் கூடு அமைத்து தூங்குகின்றன. இவை அரிதாகவே தரையில் இறங்கும்.

Photo Credit : Source: Freepik

கோஆலா (Koala)

ஆஸ்திரேலியாவின் தேசிய சின்னமாக விளங்கும் கோஆலாக்கள், யூகலிப்டஸ் மரங்களில் வாழ்கின்றன. இவை அங்கேயே இலைகளை உண்டு, தினமும் 18 மணி நேரம் வரை தூங்குகின்றன.

ட்ரீ ஃப்ராக் (Tree Frog)

மழைக்காடுகளில் வாழும் இவ்வகை தவளைகள், தங்கள் கால்களில் உள்ள ஒட்டும் தட்டுகள் (sticky pads) மூலம் இலைகள் மற்றும் கிளைகளில் ஒட்டிக்கொள்கின்றன.

கமிலியன் (Chameleon)

நிறம் மாற்றும் திறன் கொண்ட இந்த பல்லிகள் மரங்களில் மறைந்து வாழ்கின்றன. இவை தங்களது பிடிப்பான கால்கள் மூலம் கிளைகளை வலுவாகப் பற்றிக்கொள்கின்றன.

கிபன் (Gibbon)

மிகுந்த சுறுசுறுப்பான குரங்குகள். இவை தங்கள் நீண்ட கைகளைக் கொண்டு கிளையிலிருந்து கிளைக்கு “பிரேஷியேஷன்” (Brachiation) எனப்படும் இயக்கத்தால் எளிதில் தாவுகின்றன.

அணில் (Squirrel)

உலகம் முழுவதும் காணப்படும் அணில்கள் மரங்களில் கூடு அமைத்து உணவைக் குவிக்கின்றன. அவை மிகச்சிறந்த ஏறும் வல்லுனர்கள்.

ஸ்பைடர் மங்கி (Spider Monkey)

மத்திய மற்றும் தென் அமெரிக்கா மழைக்காடுகளில் வாழும் இவை, தங்கள் நீண்ட வால் மூலம் சமநிலையைப் பாதுகாத்து கிளைகளில் சுறுசுறுப்பாகச் சுழலும்.

கிரீன் இகுவானா (Green Iguana)

இந்த பெரிய பல்லிகள் மரங்களில் வாழ்ந்து, ஆபத்து ஏற்பட்டால் அதிக உயரத்திலிருந்து தண்ணீரில் குதித்து தப்பிக்கின்றன.

சிறுத்தை (Leopard)

பெரிய புலி வகை விலங்காக இருந்தாலும், சிறுத்தை மரங்களில் ஏறி ஓய்வு எடுக்கும். வேட்டையாடிய இரையை மற்ற விலங்குகள் பறிக்காமல் இருக்கவும் மரங்களில் ஏற்றி வைக்கும்.