உரம் செலவு மிச்சம்... மாடித்தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!

மாடித்தோட்டம் என்பது வெறும் பூச்செடிகள் வளர்க்கும் இடமல்ல;

அது நகர வாழ்வியிலில் தற்சார்பு வாழ்வை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி.

இயற்கை உரங்கள்

செடிகள் வளர வேண்டுமென்பதற்காக கடைகளில் சென்று செயற்கை உரங்களை வாங்குவதை விடவும் இயற்கை உரங்களைத் தயாரித்து பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

வீட்டு தேங்காய் நார், காய்ந்த செடிகள், மற்றும் சமையலறைக் கழிவுகளை (காய்கறிகள்) அடைத்துப் போட்டாலே அதுவே சிறந்த உரமாக மாறிவிடும்.

எந்த செலவுமின்றி கிடைக்கும் ‘ஜீரோ பட்ஜெட்’ வளம்

காலையில் 1 மணி நேரமும் மாலையில் 1-2 மணி நேரம் மாடித்தோட்டத்தில் செலவிடுவதும் ஒவ்வொரு செடியையும் கண்காணிப்பதும் முக்கியமான ஒன்றாகும்

நாம் சமைத்த பின் சோறு வடிக்கும் தண்ணீர் பலருக்கும் வீணாகிறது

ஆனால் அதையே ஒரு பக்கமாக சேமித்து, தாவரங்களுக்கு ஊற்றினால், அதில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் தாவர வளர்ச்சிக்குப் பெரும் ஆதாரமாக அமைகின்றன.

இதுவும் ஒரு வகை இயற்கை உரமாகும்

இயற்கை உரங்கள் என்பது பெரிய தொழில்நுட்பம் அல்ல. நாம் தினசரி வீணாக்கும் கழிவுகளே ஒரு நாளில் உரமாக மாறி, மாடித்தோட்டத்தில் நம் பசுமையாக மாற்றும் காரணியாகின்றன. சிறிய முயற்சியுடன், பெரிய மாற்றங்களை இந்த இயற்கை வழிகள் மூலம் செய்யலாம்

மேலும் அறிய