எலிகள் அதிகம் வரும் மூலைகளில் சிவப்பு மிளகாய்த் தூளைத் தூவினால், அதன் கூர்மையான வாசனை மற்றும் காரம் எலிகளை விலக்கிவிடும்.
சில கற்பூரக் கட்டிகளை எலிகள் வரக்கூடிய இடங்களில் வைக்கவும். அதன் வாசனை எலிகளை அங்கிருந்து துரத்தும்.
வெங்காயச் சாற்றை பருத்தித்துணியில் ஊற்றி மூலைகளில் வைப்பது எலிகளுக்கு தாங்க முடியாத வாசனையால் அவை தப்பிச் செல்லும்.
பூண்டு பற்களை நசுக்கி தண்ணீரில் கலக்கி தெளித்தால், அதன் வாசனை எலிகளை தூர வைக்கும்.
மிளகுத் தூளை எலிகள் நடமாடும் பாதைகளில் தூவினால், அதன் வாசனை அவர்களை அங்கிருந்து அகற்றும்.
பேக்கிங் பவுடருடன் சிறிது சர்க்கரை கலந்து வைப்பது எலிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அவை வீட்டை விட்டு விலகும்.
இந்த முறைகள் இயற்கையானவை என்பதால், குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் உள்ள வீடுகளிலும் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம்.
வீட்டில் உணவு சிதறல் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்கவும்; இதனால் எலிகள் தங்கும் வாய்ப்பு குறையும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்