இனி குக்கிங் ரொம்பே ஈஸி... அதுக்கு இந்த டிப்ஸ் போதும்!
Author - Mona Pachake
Author - Mona Pachake
கைப்பிடி வெந்தயக் கீரையுடன் கோவைக்காய், வாழக்காய், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி இதனுடன் மைதா, பொட்டுக்கடலை மாவு, வினிகர், மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து இந்த மாவை கொதிக்கும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு பொரித்தெடுத்தால் சத்தான கலர் பக்கோடா தயார்.
ஒரு கப் ஓட்ஸுடன் ஊறவைத்த பாசிப்பருப்பு, சிறிதளவு வேர்க்கடலை, பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய் போன்றவற்றினை நறுக்கி எண்ணெயில் நன்றாக வதக்கி கிச்சடி செய்தால் ருசியாக இருக்கும்.
பீன்ஸ், அவரைக்காய் போன்றவற்றை அவசரமாக சமைப்பதற்கு வேகவைக்கும்போது ஒரு துண்டு தக்காளி அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்த விட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.
சாலட் வகைகளுக்கு அன்னாசிப்பழத்தை பயன்படுத்தும் பொழுது அதை துண்டுகளாக வெட்டி சர்க்கரை கலந்த நீரில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு எடுத்து பயன்படுத்தினால் வாசனையும் சுவையும் அசத்தலாக இருக்கும்.
புதினாவை நறுக்கிவிட்டு கழுவினால் அதில் உள்ளசத்து, வாசனைகள் குறைந்துவிடும். ஆதலால் அதை கழுவி விட்டுத் தான் நறுக்கவேண்டும். மல்லித்தழையை நறுக்கிவிட்டு கழுவினால் அதில் இருக்கும் மண் நீங்கி சுத்தமாக இருக்கும்.
சப்பாத்தி, பூரி போன்றவற்றை செய்ய முற்படும் பொழுது அவற்றை திரட்டி தயாராக வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்ற வைத்தால் சட்டென்று செய்துவிட்டு வியர்த்து வழியாமல் வெளியே வந்துவிடலாம். எரிபொருளும் வீணாகாது.
வாழைப்பூவை நறுக்கினால் கையில் கறைபடியும். அதற்கு வினிகர் கலந்த நீரில் கையை கழுவினால் கறை போயே போச்சு.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்