அரிமஞ்சிரி, அண்டகம், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி போன்ற பெயர்களில் அறியப்படும், காடுமேட்டில் எளிதில் கிடைக்கும் மூலிகைச் செடி. சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளரக்கூடும்.
குப்பைமேனி இலைச்சாறு நெஞ்சுச்சளி மற்றும் இருமையை குறைக்கும் மருத்துவக் குணம் உள்ளது.
குப்பைமேனி இலையுடன் மஞ்சள், உப்பு சேர்த்து உடலில் பூசி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் தோல் நோய்கள் குணமாகும்.
குப்பைமேனி இலையுடன் கற்றாழைச் சாறு மற்றும் சிட்டிகை மஞ்சள் சேர்த்து பருக்கள் உள்ள இடங்களில் பூசினால் பருக்கள் குறையும்.
குப்பைமேனி இலைச்சாறு, மஞ்சள், கற்றாழைச் சாறு மற்றும் பல் பூண்டு சேர்த்து அரைத்து தடவினால் தழும்புகள், புண்கள் மற்றும் வடுக்கள் குணமாகும்.
குப்பைமேனி இலையை சுத்தம் செய்து உலர்த்தி, தேங்காய் எண்ணெயில் ஊற்றி தயாரித்த எண்ணெய் புண்கள், பாதங்களின் வெடிப்பு போன்றவற்றை குணப்படுத்தும்.
குப்பைமேனி, புதினா, துளசி, வேப்பிலை, மஞ்சள், கெட்டி தயிர் அல்லது பசும்பால் மற்றும் கற்றாழை ஜெல் கலந்து முகம் மற்றும் கழுத்துக்கு பேக் போட்டு அரைமணி நேரம் விட்டு கழுவலாம்.
புதினா சருமத்தை பொலிவாக மாற்றும், குப்பைமேனி முகத்தின் கரும்புள்ளிகளை நீக்கும், தயிர் இயற்கையான ப்ளீச் போல செயல்பட்டு முகத்தை சுத்தமாக்கும்.