கழுகின் பார்வை மனிதர்களை விட சுமார் நான்கு மடங்கு கூர்மையானது. மலை உச்சியிலிருந்தே பல கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இரையை கூட கண்டுபிடிக்க முடியும்.
இரவு வேட்டைக்காக பிரபலமான ஆந்தைகள், இருட்டிலும் தெளிவாக பார்க்கும் திறன் கொண்டவை. அவற்றின் கண்கள் மிகப் பெரியதும், ஒளியை அதிகம் பிரதிபலிப்பதுமாகும்.
புலிகளுக்கு இரவில் கூட தெளிவாக பார்க்கும் திறன் உள்ளது. அவற்றின் கண்களில் உள்ள டேபிடம் லூசிடம் (Tapetum lucidum) எனும் பகுதி இரவு பார்வையை அதிகரிக்கிறது.
வீட்டு பூனைகளுக்கே இரவில் சிறந்த பார்வை உள்ளது. குறைந்த ஒளியிலும் அவை தெளிவாக காண முடியும்.
இந்த பறவை நீரில் நீந்தும் மீனை கூட மேலிருந்து தெளிவாக பார்க்கும் திறன் கொண்டது. அதனால் துல்லியமாகக் குதித்து இரையைப் பிடிக்கும்.
இந்த கடல் உயிரினத்துக்கு 12 முதல் 16 நிற உணர்வுகள் உள்ளன (மனிதனுக்கு 3 மட்டும்). அதனால் உலகை மிக வண்ணமயமாகப் பார்க்க முடியும்.
சில பாம்புகள் வெப்பத்தை உணரும் சிறப்புக் கண்கள் கொண்டவை. முழு இருட்டிலும் வெப்பத்தின் மூலம் இரையை கண்டுபிடிக்க முடியும்.
பருந்துகளின் கண்களில் பிக்சல்கள் மிக அதிகம் உள்ளதால், வானிலிருந்து மைல்கள் தூரத்தில் உள்ள சிறிய உயிரினங்களையும் கண்டுபிடிக்க முடியும்.
மான்களுக்கு பரந்த கோண பார்வை உள்ளது. இதனால் சுற்றுப்புற ஆபத்துகளை உடனடியாக உணர முடிகிறது. இரவில் கூட நல்ல தெளிவுடன் பார்க்கும் திறன் உண்டு.
முதலைகளின் கண்கள் தண்ணீரில் மிதக்கும் பொழுதும் மேல் பகுதியை தெளிவாகக் காணும் வகையில் அமைந்துள்ளன. இரவு வேட்டைக்கான சிறந்த பார்வை அவற்றுக்கு உண்டு.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்