எலிகள் வீடுகளில் புகுந்துவிட்டால் துணிகள், உணவு பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்துகின்றன. மேலும் அவை நம் உணவைத் தின்று பல நோய்களை பரப்புகின்றன.
எலிகள் வீட்டில் குட்டிகளைப் போட்டு, தங்களுக்கான “சொர்க்கம்” போல வாழ ஆரம்பிக்கின்றன. இதனால் அவற்றை விரட்டுவது கடினமாகிறது.
முன்னர் மக்கள் தேங்காய், தக்காளி மற்றும் சில ரசாயன கலவைகளை எலி வலைகளில் வைத்து பிடிப்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் இது குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
எலிகள் புதினா வாசனையை வெறுக்கின்றன. புதினா எண்ணெயில் பஞ்சை நனைத்து எலி பொந்துகளுக்கு அருகில் வைக்கவும். இதன் வாசனை எலியின் நுரையீரலை பாதித்து அவை தப்பி ஓடும்.
மனித முடியைக் கண்டாலே எலிகள் அஞ்சி ஓடி விடும். அவை தவறுதலாக முடியை விழுங்கினால் உடனடி மரணத்திற்கும் வழிவகுக்கும்.
பூனை சிறுநீரின் வாசனையை எலிகள் கண்டறிய முடியாது. அவை அதை நீர் என்று நினைத்து குடித்து மரணம் அடையக்கூடும்.
புதினா, மனித முடி, பூனை சிறுநீர் போன்ற இயற்கை வழிகள், ரசாயனங்கள் இல்லாமல் எலிகளை வீட்டிலிருந்து விரட்ட உதவும். இது மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது.