வாயில் வைத்து சுவைத்தால் வறட்சி, இருமல், நெஞ்செரிச்சல், தொண்டை அலர்ஜி குணமாகும். நீடித்து எடுத்தால் தாது கட்டும், நுரையீரல் தேறும், அழகு மற்றும் வலிமை தரும்.
காயவைத்து நெய்யில் பொரித்து தூளாக்கி பாலில் கலந்து குடிக்க முக அழகு கூடும், நரம்புத்தளர்ச்சி குறையும்.
பொடியாக்கி இளநீரில் கலந்து குடித்தால் தந்தி மேகம், பெரும்பாடு, சீத/செரியாக் கழிச்சல் தீரும்.
கிராம்புடன் சேர்த்து பொடித்து தேனில் கலந்து கொடுத்தால் கழிச்சல், ரத்த வாந்தி போன்றவை குணமாகும்.
நரம்புகளை உறுதியாக்கும் சிறந்த பிசின் வகையாகும்.
நரம்பு உறுதி, தாது பலம் மற்றும் உடல் வலிமை பெற உதவும்.
மாம் பட்டைச் சாறு அல்லது பிசினை வெடித்த பகுதிகளில் தடவ குணமடையும்.
பாதத்தில் உள்ள புத்த வெடிப்புகளில் தடவுவதால் குணம் காணப்படும்.
வறுத்து பொடித்து பாலுடன் எடுத்தால் பிரமேகம், மேகம், கிரந்தி, பேதி ஆகியவை குணமாகும். தாது கட்டும், உடல் பொலிவு பெறும்.
வெண்ணெயுடன் கலந்து எடுத்தால் நீர் எரிச்சல், மேகநோய், அக உறுப்புப் புண்கள், வெள்ளை, பெரும்பாடு போன்றவை தீரும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்