பயணத்தின் போது கண்கள் நகர்வை உணர்கின்றன; ஆனால், காது மற்றும் மூட்டுகள் "நாம் நிசப்தமாக இருக்கிறோம்" என மூளைக்கு உணர்த்துகின்றன. இந்த முரண்பாடே மோஷன் சிக்னெஸ்க்கு காரணம்.
இந்த சிக்னல் முரண்பாட்டால் மூளை நம்மை விஷம் அல்லது போதைப்பொருள் எடுத்துக் கொண்டதாக எண்ணி, அதை வெளியேற்ற முயல்கிறது — அதுவே வாந்தியாக வெளிப்படுகிறது.
காரை ஓட்டும் நபர்கள் நகரும் பொருட்களை நேரடியாக பார்க்கின்றதால், மூளைக்கு தெளிவான சிக்னல் கிடைக்கிறது. எனவே வாந்தி ஏற்படுவதில்லை.
பின்புற இருக்கையில் அமர்வதைவிட, முன்னிலை இருக்கையில் அமர்வது சிக்னல் தெளிவை அதிகரிக்கும்.
பஸ்ஸில் பயணிக்கும்போது, ஜன்னல் அருகில் அமர்ந்து, தூரத்தில் உள்ள பொருட்களை பார்வையிடுவது வாந்தி உணர்வைக் குறைக்கும்.
பயணத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு எதுவும் சாப்பிட வேண்டாம். எண்ணெய் மற்றும் அதிக கலோரி உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை போன்ற இயற்கை வழிகள் வாந்தி உணர்வைக் குறைக்க உதவலாம்.
பயணத்தின் போது மொபைல் பார்க்கவும், புத்தகம் படிக்கவும் வேண்டாம் — இது வாந்தி உணர்வை அதிகமாக தூண்டும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்