Advertisment

ஷாக் கொடுத்த செழியன்... வீட்டை விட்டு கிளம்பும் கோபி - ராதிகா : ஈஸ்வரி என்ன சொல்வார்?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது?

author-image
WebDesk
New Update
radhika Gopu Backia

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களாக, ராதிகாவின் கர்ப்பத்தை வீ்ட்டில் எப்படி சொல்வது என்று தெரியாமல் கோபி அல்லல்படுகிறார். இதை எப்படியாவது சொல்ல வேண்டும் என்று முடிவு செய்த அவருக்கு எழில் பச்சை கொடி காட்டினாலும், செழியன் சிவப்பு கொடி காட்டி கோபியை ஆஃப் செய்துவிட்டார்.

Advertisment

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு தொடக்கத்தில், கர்ப்பத்தை வீட்டில் சொல்லிட்டீங்களா என்று ராதிகாவின் அம்மா ராதிகாவிடம் கேட்க, கோபி சொல்கிறேன் என்று சொல்லியிருப்பதாக ராதிகா கூறுகிறார். இதை கேட்ட அவரது அம்மா, அவர் சொல்ற ஐடியாவில் இருக்கிறாரா அல்லது நான் வந்து சொல்லட்டுமா என்று கேட்க, அதற்குள் மயூ வந்து ராதிகாவை கட்டிப்பிடித்துக்கொள்கிறார்.

அப்போது மயூவை மெதுவாக விளக்கி விடும் ராதிகாவின் அம்மா, ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்ல, மயூ ரொம்ப சந்தோஷத்தில் எனக்கு ஒரு குட்டிப்பாப்பா வந்தா சந்தோஷம் என்று சொல்ல, அதை கேட்டு ராதிகாவும் சந்தோஷப்படுகிறாள். அதன்பிறகு பாக்யா வீட்டில் ஊறுகாய் தாளித்துக்கொண்டிருக்க, அங்கு கேரியருடன் வரும் ராதிகாவிடம், என்ன ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கிட்டு வரியா என்று கேட்க என் அம்மா செய்துகொடுத்தார் என்று சொல்கிறாள்.

அதன்பிறகு பாக்யாவின் ஊறுகாய் வாசத்தில் நாவில் எச்சில் ஊறும் ராதிகா ஊறுகாயில் கொஞ்சம் கேட்டு வாங்கி சாப்பிடுகிறார். அதன்பிறகு, இவ மட்டும் சாப்பாடு கொண்டு வந்திருக்கா, கோபி எப்படி சாப்பிடுவான், நீ அவனுக்கு சமைச்சி தரியா என்று ஈஸ்வரி பாக்யாவிடம் கேட்க, என்னால் சமைக்க முடியாது. உங்களால் தான் நான் அவரை வீட்டில் விட்டிருக்கிறேன் என்று சொல்ல, சரி நீ சமைக்க வேண்டாம். இனி இந்த வீட்டில் சண்டை வேண்டாம் என்று எழுந்து செல்கிறார்.

அதன்பிறகு எழில் – செழியன் இருவரும் ஜூஸ் குடித்துக்கொண்டிருக்க, அங்கு வரும் கோபி, ராதிகா கர்ப்பமான விஷயத்தை சொல்லிவிட முடிவு செய்து, எனது நண்பனின் மகள் கல்லூரியில் படிக்கிறாள். அவனுக்கு இப்போ 2-வது குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்ல, இதுல என்ன இருக்கு என்று எழில் சொல்ல, கோபி சந்தோஷப்படுகிறான். ஆனால் செழியன் இது என்ன கன்றாவியா இருக்கு என்று கேட்க, அதிர்ச்சியான கோபி அங்கிருந்து கிளம்பி விடுகிறான். ரூமுக்கு வந்த கோபியிடம் ராதிகா விசாரிக்கிறாள்.

செழியன் எழிலிடம் இதை பற்றி மறைமுகமாக சொல்ல முடிவு எடுத்து சொன்னேன். எழில் சந்தோஷப்பட்டான். ஆனால் செழியன் அப்படி இல்லை. அதனால் வந்துவிட்டேன் என்று சொல்ல, நீங்க எப்போ சொல்லப்போறீங்க, உங்களால் சொல்ல முடியலனா விடுங்க, நாம நம்ம வீட்டுக்கு போய்டலாம். இல்லனா தூரமாக எங்காவது போயிலாம் என்று ராதிகா சொல்ல, இது நல்ல ஐடியாவா இருக்கே என்று கோபி சொல்ல அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment