Advertisment

இந்திய கொடி தொடர்பான சர்ச்சை பதிவு; மன்னிப்பு கோரினார் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்

இந்திய கொடியில் உள்ள அசோக சக்கரத்தை ஒத்த சின்னத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளைக் கிண்டல்; மன்னிப்பு கேட்டார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாலத்தீவு முன்னாள் அமைச்சர் மரியம் ஷியுனா

author-image
WebDesk
New Update
maldives mariyam

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு உடன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மரியம் ஷியுனா. (எக்ஸ்/மரியம் ஷியுனா)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மாலத்தீவு முன்னாள் அமைச்சர் மரியம் ஷியுனா, அசோக சக்கரத்தை ஒத்த சின்னத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பதிவிட்ட சமூக ஊடகப் பதிவு சர்ச்சையான நிலையில், மன்னிப்பு கேட்டார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Suspended Maldives minister apologises after row over post linked to Indian flag

“கவனத்தையும் விமர்சனத்தையும் பெற்ற என்னுடைய சமீபத்திய சமூக ஊடக பதிவை பற்றி விளக்க விரும்புகிறேன். எனது சமீபத்திய பதிவின் உள்ளடக்கத்தால் ஏதேனும் குழப்பம் அல்லது குற்றங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று மரியம் ஷியுனா X தளத்தில் பதிவிட்டுள்ளார். 

“மாலத்தீவு எதிர்க்கட்சியான எம்.டி.பி.க்கு (MDP) நான் அளித்த பதிலில் பயன்படுத்தப்பட்ட படம் இந்தியக் கொடியை ஒத்திருப்பது என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இது முற்றிலும் தற்செயலானது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், மேலும் இது ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால் நான் மனப்பூர்வமாக வருந்துகிறேன்,” என்று மரியம் ஷியுனா கூறினார்.

“மாலத்தீவு அதன் உறவையும், இந்தியாவுடன் நாம் பகிர்ந்து கொள்ளும் பரஸ்பர மரியாதையையும் ஆழமாக மதிக்கிறது. இது போன்ற சிக்கல்களைத் தடுக்க எதிர்காலத்தில், நான் பகிரும் உள்ளடக்கத்தை சரிபார்ப்பதில் மிகவும் விழிப்புடன் இருப்பேன்," என்று முன்னாள் எம்.பி.,யான மரியம் ஷியுனா கூறினார்.

மாலத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் கட்சியின் உறுப்பினரான மரியம் ஷியுனா, வரவிருக்கும் மாலத்தீவு தேர்தலில் தனது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன், MDP போஸ்டரில் திசைகாட்டிக்கு பதிலாக அசோக சக்கரம் போன்ற சின்னத்தைப் பயன்படுத்தினார்.

இதுபோன்ற பிரச்சனைகளில் மரியம் ஷியுனா செய்திகளில் வருவது இது முதல் முறை அல்ல. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட 3 அமைச்சர்களில் மரியம் ஷியுனாவும் ஒருவர். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு தெரிவித்தபடி, லட்சத்தீவில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து லட்சத்தீவு மற்றும் மாலத்தீவுகள் தொடர்பாக சமூக ஊடகத் மோதலில் ஈடுபட்டார்.

இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் இந்த விவகாரத்தில் சிக்கலாகின. அடுத்த மாதங்களில் உறவு மோசமடைந்தது, மேலும் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் மாலத்தீவில் இருந்து தனது இராணுவ வீரர்களை இந்தியா திரும்பப் பெறுவது என்று இரு நாடுகளும் முடிவு செய்தன.

சீனா சார்புத் தலைவராகக் கருதப்படும் மாலத்தீவு அதிபர் மொஹமட் முய்ஸு, சீனாவுக்குச் சென்றிருந்தபோது, தனது நாடு சிறியதாக இருக்கலாம், ஆனால் அது “எங்களை கொடுமைப்படுத்துவதற்கான உரிமத்தை அவர்களுக்கு வழங்காது” என்று இந்தியாவைக் கிண்டலடிக்கும் வகையில் கூறியிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India maldives
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment