New Update
00:00
/ 00:00
ஒரு முறை இப்படி நெல்லை ஸ்பெஷல் இடி சாம்பார் செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் 6
தக்களி 4
முருங்கைக்காய் 3
காத்திர்க்காய் 4
15 சின்ன வெங்காயம்
4 பச்சை மிளகாய்
6 பல் பூண்டு
துவரம் பருப்பு 1 கப்
எலுமிச்சை அளவு புளி
1 ஸ்பூன் புழுங்கல் அரிசி
1 ஸ்பூன் கடலை பருப்பு
முக்கால் டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
அரை ஸ்பூன் வெந்தயம்
முக்கால் டீஸ்பூன் சீரகம்
1 ஸ்பூன் துவரம் பருப்பு
1 ½ ஸ்பூன் மல்லி
3 ஸ்பூன் எண்ணெய்
6 வத்தல்
1 கொத்து கருவேப்பிலை
2 ஸ்பூன் தேங்காய்
5 சின்ன வெங்காயம்
செய்முறை: குக்கரில் பருப்பை, தண்ணீருடன் சேர்த்து 4 விசில் விட வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து மற்ற காய்கறிகளை சேர்க்கவும். தொடர்ந்து தக்காளி, வெண்டைக்காய் நறுக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து இதில் தண்ணீர் சேர்த்து வேக விடவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் புளி கரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து உப்பு சேர்த்து வேக விடவும். தொடர்ந்து மஞ்சள் தூள் சேர்த்து கிளரவும். தனி பார்த்திரத்தில் புழுங்கல் அரிசி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். தொடர்ந்து அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, சீரகம், மல்லி, துவரம் பருப்பு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து இதை எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து எண்ணெய் சேர்த்து வத்தல், கருவேப்பிலை சேர்த்து வதக்கி, இத்துடன் சேர்த்து அரைத்துகொள்ளவும். தற்போது இந்த அரைத்த மசாலாவை காய்கறியில் கொட்டவும். தொடர்ந்து மிக்ஸியில் தேங்காய் சின்ன வெங்காயம் சேர்த்துஅரைத்து சாம்பாரில் சேர்க்கவும். தொடர்ந்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து பருப்பு சேர்த்து கிளரவும். எண்ணெய் கடுகு, கருவேப்பிலை, வத்தல் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.