Advertisment

இனி ரவை உப்புமாவை இப்படி செய்து பாருங்க: செம்ம சுவையா இருக்கும்

ரவை உப்புமாவை, இனி இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ரவை உப்புமாவை, இனி இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

ரவை - 2 கப்

தண்ணீர் - 2 1/2 கப் (இரண்டரை கப்)

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - தேவையான அளவு

உளுந்து - தேவையான அளவு

கடலைப்பருப்பு - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - தேவையான அளவு

பெரிய வெங்காயம் - 1

உப்பு - தேவையான அளவு

செய்முறை: 2 கப் ரவைக்குகப் தண்ணீர் சேர்க்க வேண்டும். அதாவது , 1 கப் ரவைக்கு 11/4 கப் அளவு சேர்க்க வேண்டும். அப்போது தான் ரவை ஒட்டாமல் உதிரி உதிரியாக வரும்.

 முதலில் அடுப்பில் கடாய் வைத்து ரவைவை வறுக்க வேண்டும். ரவை வறுபட்டதும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும். அடுத்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை நறுக்கி சேருங்கள். அடுத்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

 வெங்காயம் வதங்கியதும் தண்ணீர் இரண்டரை கப் அளந்து சேர்க்கவும். அதில் தேவையான அளவு உப்பு போடவும். பிறகு வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடுங்கள். பிறகு மூடி போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மூடியை திறந்து 1 முறை கரண்டு கொண்டு நன்கு கிளறவும். பிறகு 5 நிமிடம் கழித்து மீண்டும் ஒரு முறை கிளறி விடவும். பிறகு 2 நிமிடம் விட்டு அடுப்பை அணைத்து விடலாம். இப்படி செய்யும் போது உப்புமா ஒட்டாமல் உதிரி உதிரியாக வரும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment