Advertisment

6 மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு- பாலச்சந்திரன் பேட்டி

நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறிய தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன், சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பில்லை என்று வெள்ளிக்கிழமை கூறினார்.

author-image
WebDesk
New Update
Balachandran

தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7-ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் கூறிய தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன், சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பில்லை என்று வெள்ளிக்கிழமை கூறினார்.

Advertisment

தமிழகத்தில் வெயிலின் வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், நாளை (மே 4)  கத்திரி வெயில் தமிழ்நாட்டில் நாளை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் கோடை மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 



தமிழகத்தில் நாளை (மே 4) கத்திரி வெயில் தொடங்குகிறது. மே 3 மற்றும் மே 4-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “இன்று (மே 3 முதல் 6-ம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.



இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்ப அலை அதிகரித்து காணப்படுகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7-ல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோடை மழை பெய்யும்போது வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது. தருமபுரி, திருத்தணி, திருப்பத்தூர் உட்பட 10 இடங்களில் 42 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.

கரூரில் இயல்பை விட 7% அதிகமாக 43 டிகிரி செல்சியஸ் 11வெப்பம் பதிவாகி உள்ளது. ஏப்ரல் தொடங்கி 27 நாட்கள் ஈரோட்டில் தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகி உள்ளது. சென்னையில் அடுத்த 2 தினங்களுக்கு 39-40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்அடுத்த 5 தினங்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்யக்கூடும். சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Weather Report Balachandran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment