Coimbatore, Madurai, Trichy News updates: மீன்பாசி குத்தகைக்கு மின்னணு விண்ணப்பங்கள்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sivagan court
  • May 24, 2025 20:09 IST

    கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்குதடை

    கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறையும்வரை குற்றால அருவிக்கு வருவதைத் தவிர்க்க வனத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • May 24, 2025 19:39 IST

    மீன்பாசி குத்தகை ஒப்பந்தத்திற்கு மின்னணு விண்ணப்பங்கள்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாதரக்குடி, சங்காரபுரம், அமராவதிபுதூர், செஞ்சை, கீழஊரணி மற்றும் செஞ்சை ஊரணி ஆகிய கண்மாய்களில் மீன்பிடி உரிமையை மூன்று ஆண்டுகள் காலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்க மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் (e-Tenders) வரவேற்கப்படுகின்றன. இந்த ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள், தொடர்புடைய ஒப்பந்த ஆவணங்கள் மற்றும் விதிமுறைகளை அறிந்து கொள்ள, www.tntenders.gov.in என்ற அரசுத் தளத்தை பார்வையிடலாம். மேலும் விவரங்களுக்கு 04575-240848 என்ற தொலைபேசி எண்னிலும், adfsivaganga@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப. அவர்கள் அறிவித்துள்ளார்.



  • Advertisment
  • May 24, 2025 18:41 IST

    கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

    கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையை 8 வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • May 24, 2025 17:59 IST

    மன வளர்ச்சி குன்றிய இளைஞரின் சடலம் மீட்பு

    பொள்ளாச்சி அருகே தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட மன வளர்ச்சி குன்றிய இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார். காப்பக நிர்வாகிக்கு சொந்தமான தோட்டத்தில் புதைக்கப்பட்ட இளைஞரின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Advertisment
    Advertisements
  • May 24, 2025 17:27 IST

    தொட்டபெட்டா செல்ல தடை 

    நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொட்டபெட்டா காட்சி முனை, பைன் பாரஸ்ட் ஆகிவற்றுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் நாளை ஒருநாள் மட்டும் தொட்டபெட்டா மூடப்படுகிறது. 



  • May 24, 2025 14:28 IST

    இன்று 13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 13 மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று தகவல் வெளியாகியுள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, அரியலூர், பெரம்பலூர், தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • May 24, 2025 13:09 IST

    கோவைக்கு கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் - கோவை கலெக்டர் 

    கோவை ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கோவையில் கனமழை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, 2 நாட்கள் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். மரம் வெட்டும் கருவிகள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. வால்பாறை, டாப்சிலிப் பகுதியில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். மாவட்ட சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியிலும் மண்டல வாரியாக உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.



  • May 24, 2025 12:44 IST

    இ.டி-க்கு மட்டுமல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம் -  உதயநிதி ஸ்டாலின் 

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 24, 2025) அனைத்து துறை அதிகாரிகளுடன் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "மக்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, பட்டா கேட்டு வரும் பொதுமக்களை அலைக்கழிக்காமல் உடனடியாக அவர்களுக்கு தீர்வு காண வேண்டும். அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

    மேலும், “இ.டி-க்கு மட்டுமல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம். மிரட்டப் பார்த்தார்கள் நாங்கள் பயப்பட மாட்டோம். தொடர்ந்து குரல் கொடுப்போம். அடிபணிவதற்கு இது அடிமைகள் கட்சி இல்லை. இது சுயமரியாதைக் கட்சி. பயப்படமாட்டோம். எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம்.” என்று கூறினார்.



  • May 24, 2025 12:36 IST

    வால்பாறைக்கு கனமழை எச்சரிக்கை; மின் வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    கோவை மாவட்டம் வால்பாறைக்கு கனமழை எச்சரிக்கை (ரெட் அலர்ட்)  விடுக்கப்பட்டுள்ளதால், மின் வாரியம் சார்பில் அப்பகுதிக்கு மட்டும் முன்னெச்சரிக்கையாக 150 மின் கம்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உதவி மின் பொறியாளர் தலைமையில் 50 கூடுதல் மின் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.



  • May 24, 2025 11:56 IST

    சுடுகாட்டில் 140 கிலோ காப்பர் வயர் திருடியவர் கைது

    கடலூர் ரெட்டிச்சாவடி காவல் நிலைய சரகம் புதுக்கடை பைபாஸ் சாலையில் உள்ள மின்மாற்றியில் சுமார் 140 கிலோ காப்பர் வயர்களைத் திருடிய வழக்கில், சத்யராஜ் (எ) மணிமாறன் (32) என்பவரை ரெட்டிச்சாவடி போலீசார் கைது செய்தனர். புதுக்கடை எல்லை கழுத்துமாரியம்மன் கோயில் அருகே உள்ள சுடுகாட்டில் போலீசார் கண்காணித்துக் கொண்டிருந்தபோது, தப்பி ஓட முயன்ற மணிமாறனைப் பிடித்து காப்பர் வயர்களைக் கைப்பற்றினர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இரண்டு குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.



  • May 24, 2025 11:54 IST

    பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    காற்றழுத்த தாழ்வு மண்டலம்  காரணமாக பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. 

    ரத்னகிரி- டபோலி இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று முற்பகல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



  • May 24, 2025 11:49 IST

    கடலூரில் 53 ஆயுதப்படை காவலர்களுக்குப் பணி மாறுதல் உத்தரவு

    கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், இன்று (24.05.2025) கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 53 ஆயுதப்படை காவலர்களுக்குப் பணி மாறுதல் உத்தரவுகளை பிறப்பித்தார்.

    பணிமூப்பு அடிப்படையில் தாலுகா காவல் நிலையங்களுக்குப் பணியிட மாற்றம் வழங்குவது குறித்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் அபண்டைராஜ், ஆய்வாளர்கள் குருமூர்த்தி, அருட்செல்வன், மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் சிவக்குமார், மற்றும் பிரிவு கண்காணிப்பாளர் ஜான்சன் சகாயராஜா ஆகியோர் முன்னிலையில், காவலர்களிடம் கலந்தாய்வு நடத்தப்பட்டு, அவர்கள் விரும்பும் காவல் நிலையங்கள் கேட்கப்பட்டு, உடனடியாக இடமாற்றங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் காவலர்களின் பணி மாறுதல் குறித்த உண்மையான காரணங்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் விருப்பத்திற்கேற்ப இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.Cuddalore



  • May 24, 2025 11:39 IST

    9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை

    மத்திய கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதன்  காரணமாக சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.



  • May 24, 2025 11:35 IST

    குமரி அருகே சூறைக் காற்றுடன் பெய்த மழையில் வாழை மரங்கள் சேதம்

    Credit: Sun News



  • May 24, 2025 10:43 IST

    கோவையில் கனமழை எச்சரிக்கை - தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை

    நாளை மற்றும் நாளை மறுநாள் கோவைக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரக்கோணத்தில் இருந்து மாநில பேரிடர் மீட்புப் படையினர் இன்று கோவைக்கு வந்துள்ளனர்.



  • May 24, 2025 10:41 IST

    தென்காசிக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

    தென்காசி மாவட்டத்திற்கு இன்று முதல் 3 தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

    பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண். 1077 மற்றும் 04633-290548 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தெரிவித்துள்ளார்



  • May 24, 2025 10:29 IST

    கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு

    கோவையில் நேற்று முதலே பெய்து வந்த கனமழையால், குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • May 24, 2025 09:52 IST

    ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக சாய்ந்திருந்த மின்கம்பம் அருகே விளையாடச் சென்ற 2 குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் 5 வயதான குழந்தை ஜமித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 9 வயதான பிரதிதா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



  • May 24, 2025 09:38 IST

    கோவை குற்றாலத்திலும் குளிக்கத் தடைவிதிப்பு

    மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தில் குளிக்க வனத்துறையினர் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.



  • May 24, 2025 09:27 IST

    சேலம்: கொள்ளையனை சுட்டுப்பிடித்த போலீசார்

    சேலம் மாவட்டம் ஓமலூர் காடையாம்பட்டி அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையனை சனிக்கிழமை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.



  • May 24, 2025 09:07 IST

    தென்காசி குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

    வெள்ளப்பெருக்கு இல்லாதபோதிலும், மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிவெள்ளப்பெருக்கு இல்லாதபோதிலும், மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி தென்காசி குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. களின் பாதுகாப்புக் கருதி தென்காசி குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: