சீடிக்கள், பாடல் கேசட்டுகள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் ? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசைத்தட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசைதட்டு நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.
படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பிலும் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது.
ஏப்ரல் 17ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது “ இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று அவர் நினைப்பதை ஏற்க முடியாது ” என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
” பாடல் வரிகள், பாடகர் அனைத்தும் சேர்த்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை என இருக்கும் போது, பாடலுக்கு பாடலாரிசியருக்கும் உரிமை கோரினால் என்ன ஆகும். பாடல் கேசட்டுகள், சிடிக்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்கும் சொந்தம்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுபட்டது எனவும் அறிவித்த நீதிபதிகள், இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் இதற்குப் பொருந்தாது என்று தெரிவித்துள்ளனர்.