Advertisment

வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்பு வெளியேற்றம்; 2010 சட்ட திருத்தம் செல்லாது: ஐகோர்ட்

வக்ஃப் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்களை 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம், மத்திய சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின் மூலம் மட்டுமே வெளியேற்ற முடியும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai high court important order to DGP, madras high court, court order to avoid Two Finger test in sexual assault case, இருவிரல் பரிசோதனை, சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு, Two Finger test, Chennai high court order to avoid in sexual assault case

“வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றம் தொடர்பாக 2010ல் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் அரசியலமைப்பிற்கு முரணானது” என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Madras High Court | 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டத்தின் கீழ் வக்ஃப் சொத்துக்களை கொண்டு வந்த 2010 ஆம் ஆண்டு திருத்தம் அரசியலமைப்பிற்கு முரணானது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisment

தொடர்ந்து, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு (CEO) உத்தரவிட அதிகாரம் அளித்தது.

தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி டி. பாரத சக்கரவர்த்தி ஆகியோர் 2010 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத்தால் செய்யப்பட்ட திருத்தம் மத்திய சட்டமான 1995 ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்திற்கு எதிரானது என்று அறிவித்தனர்.

2013 ஆம் ஆண்டு மத்திய சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி அமைக்கப்பட்ட வக்ஃப் தீர்ப்பாயங்கள் மூலம் மட்டுமே வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிப்பவர்களை அகற்ற முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி மற்றும் எஸ்.ஆர் ஆகியோர் தலைமையிலான வழக்கறிஞர்களின் வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, மாநில சட்டமும், மத்திய சட்டமும் இணைந்து செயல்படலாம் என்ற மாநில அரசின் வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

ஆகவே, வக்ஃப் சொத்துக்கள் அல்லது உரிமை தொடர்பாக சிக்கலான தகராறு இருந்தால், மத்திய சட்டத்தின் கீழ் தீர்ப்பாயத்தை அணுகலாம்.

தொடர்ந்து, தீர்ப்பை எழுதிய நீதிபதி சக்ரவர்த்தி, வக்ஃப் சொத்துக்களை ஆக்கிரமிப்பு அல்லது சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஆகியவற்றைக் கையாள்வதற்கு வக்ஃப் சட்டம், 1995 இன் அசல் விதிகள் போதுமானதாக இல்லை.

எனவே, பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம், 1971 வக்ஃப் சொத்துக்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சச்சார் கமிட்டி பரிந்துரைத்தது, ஏனெனில் இந்த சொத்துக்கள் பொதுமக்களின் நலனுக்காகவும் இருந்தன.

இந்தப் பரிந்துரையைத் தொடர்ந்து தமிழ்நாடு 2010ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வந்தாலும், பல மாநிலங்கள் அவ்வாறு செய்யவில்லை.

எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நாடு முழுவதும் ஒரே சீரான தன்மையை உறுதி செய்யும் வகையில், பார்லிமென்ட், 2013ல் வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்தது. 2013 ஆம் ஆண்டு திருத்தம் மத்திய சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி மட்டுமே வக்ஃப் சொத்துக்களை ஆக்கிரமிப்பவர்களை வெளியேற்ற முடியும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மத்திய சட்டத்தில் 2013 திருத்தம் 2010 ஆம் ஆண்டு மாநில சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து வந்ததால், மாநிலத் திருத்தம் பற்றி நாடாளுமன்றம் நன்கு அறிந்திருந்தும், அது 1995 ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தை மனப்பூர்வமாகத் திருத்தியது என்று கருத வேண்டும்” என்று பெஞ்ச் கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment