வேலையை மாற்றினால் பி.எஃப் கணக்கு மூடப்படுமா? எவ்வளவு நாள் வட்டி கிடைக்கும்?

பழைய மொபைல் எண் அல்லது வங்கி விவரங்களில் மாற்றம் இருந்தால், பிஎஃப் தொகைக்கான ஒடிபி (OTP) அல்லது க்ளைம் (Claim) செய்வதில் சிக்கல்கள் எழலாம். நாமினி விவரங்கள் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், க்ளைம் செயல்முறை மேலும் சிக்கலடைய வாய்ப்புள்ளது.

பழைய மொபைல் எண் அல்லது வங்கி விவரங்களில் மாற்றம் இருந்தால், பிஎஃப் தொகைக்கான ஒடிபி (OTP) அல்லது க்ளைம் (Claim) செய்வதில் சிக்கல்கள் எழலாம். நாமினி விவரங்கள் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், க்ளைம் செயல்முறை மேலும் சிக்கலடைய வாய்ப்புள்ளது.

author-image
abhisudha
New Update
EPFO PF Withdrawal Limit EPF Interest

EPFO New Rules| PF Withdrawal Limit| EPF Interest| EPF Transfer UAN

நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சார்ந்த துறையில் பணிபுரிவோரின் வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை (Pension Schemes) நிர்வகிக்கும் மத்திய அரசு அமைப்பான ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), வேலை இழப்பு மற்றும் வேலையின்மை காலங்களில் பிஎஃப் நிதியை எடுப்பதற்கான விதிகளை அண்மையில் மாற்றியமைத்துள்ளது.

Advertisment

இந்த மாற்றங்கள் ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், பல பிஎஃப் சந்தாதாரர்கள் மத்தியில் குழப்பங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

வேலை இழந்தால் பிஎஃப் வித்ட்ராவல்: முக்கிய மாற்றம்!

வேலையின்மை காலங்களில் பிஎஃப் தொகையை எடுக்கும் விதிகளில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கூற்றுப்படி, இந்த மாற்றம், ஊழியர்கள் ஒரு வருடம் வரை சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நீடிக்கவும், புதிய வேலை தேடவும், ஓய்வூதியப் பலன்களை நீண்ட காலத்திற்கு உறுதி செய்யவும் உதவும்.

Advertisment
Advertisements

ஓய்வூதிய நிதி (EPS) பெறுவதற்கான விதியில் மாற்றம்

வேலை இழந்தால் ஓய்வூதிய நிதியை (Employees’ Pension Scheme - EPS) எடுப்பதற்கான விதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பழைய விதி: வேலை இழந்த 2 மாதங்களுக்குப் பிறகு ஊழியர் தனது ஓய்வூதியத் தொகையை எடுக்க அனுமதிக்கப்பட்டார்.

புதிய விதி: ஓய்வூதிய நிதியை (EPS) எடுக்க அனுமதிக்கப்படும் காலம், 2 மாதங்களிலிருந்து 36 மாதங்களாக (3 ஆண்டுகள்) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவும், ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தின் நீண்ட கால சமூக பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வேலையின்மையில் பி.எஃப். கணக்கு நிலை என்ன?

இந்த மாற்றங்களுக்கிடையே, "வேலையை விட்ட பிறகு அல்லது வேலை மாறும்போது பிஎஃப் சந்தா ரத்தாகுமா? எவ்வளவு காலத்துக்கு வட்டி கிடைக்கும்?" என்ற கேள்விகள் எழுகின்றன.

உறுப்பினர் நிலை தொடரும்!

பி.எஃப். விதிகளின்படி, ஒரு நபர் பிஎஃப் உறுப்பினரான பிறகு, அவருடைய உறுப்பினர் நிலை ஒருபோதும் முடிவுக்கு வராது. உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் நீங்கள் எடுக்கும் வரை, உறுப்பினர் நிலை தொடரும். அதாவது, நீங்கள் வேலையை விட்டு விலகினாலும், இ.பி.எஃப்.ஓ (EPFO) உங்கள் கணக்கைத் செயலிழக்கச் செய்யாது; சந்தா (Contribution) செலுத்துவது மட்டுமே நிற்கும்.

வட்டி எவ்வளவு காலத்துக்குக் கிடைக்கும்?

நீங்கள் வேலையை விட்டு விலகி, உங்கள் பிஎஃப் கணக்கிற்கு எந்தச் சந்தாவும் செலுத்தப்படாவிட்டாலும், அந்தத் தொகைக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு வட்டி வழங்கப்படும்.

தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு எந்தச் சந்தா தொகையும் செலுத்தப்படாவிட்டால், அந்தக் கணக்கு "செயலற்ற கணக்கு" (Inoperative Account) என அறிவிக்கப்படும்.

இந்தச் செயலற்ற நிலையை அடைந்த பிறகு, அந்தக் கணக்கிற்கு வட்டி கொடுப்பது நிறுத்தப்படும்.

உதாரணமாக: ஒருவர் ஜூன் 2022-இல் வேலையை விட்டு விலகி, எந்தப் புதிய சந்தாக்களும் செலுத்தப்படாவிட்டால், ஜூன் 2025 வரை அவருக்கு வட்டி கிடைக்கும். அதன் பிறகு வட்டி கிடைப்பது நின்றுவிடும்.

வட்டி நின்றாலும் பணம் பத்திரமாக இருக்கும்!

வட்டி நிறுத்தப்பட்டாலும், உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள அசல் தொகையும், அதுவரை சேர்ந்த வட்டியும் பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் விண்ணப்பித்து அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

புதிய வேலையில் இணைந்தால் என்ன செய்வது?

நீங்கள் புதிய வேலையில் சேர்ந்து புதிய பிஎஃப் கணக்கைத் தொடங்கினால், உங்கள் பழைய பிஎஃப் கணக்கைப் புதிய கணக்கிற்கு UAN (Universal Account Number) மூலம் மாற்றலாம். இவ்வாறு மாற்றும்போது, உங்களின் உறுப்பினர் நிலையும், சந்தா செலுத்துவதும் மீண்டும் செயல்படத் தொடங்கும். இதனால், உங்கள் சேவைக்காலம் தொடர்ச்சியாகக் கருதப்படுவதுடன், வட்டியும் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யலாம்.

நீண்ட நாள் செயலற்ற கணக்கின் சிக்கல்கள்:

பிஎஃப் கணக்கு நீண்ட நாள் செயலற்று இருந்தால், வட்டி நின்றுபோவதுடன், கணக்கைக் கண்காணிப்பதும் கடினமாகலாம். பழைய மொபைல் எண் அல்லது வங்கி விவரங்களில் மாற்றம் இருந்தால், பிஎஃப் தொகைக்கான ஒடிபி (OTP) அல்லது க்ளைம் (Claim) செய்வதில் சிக்கல்கள் எழலாம். நாமினி விவரங்கள் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், க்ளைம் செயல்முறை மேலும் சிக்கலடைய வாய்ப்புள்ளது.

எனவே, நீங்கள் வேலை மாறினாலோ அல்லது நீண்ட காலத்திற்கு வேலையில்லாமல் இருந்தாலோ, உங்கள் பிஎஃப் நிதியைப் புதிய கணக்கிற்கு மாற்றுவது அல்லது முழுமையாக எடுக்கும் செயல்முறையை முடிப்பது அவசியம்.

இந்த செய்தியை ஆங்கில மொழியில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!

Epfo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: