limit enhanced under New Tax Regime | Indian Express Tamil

பழைய, புதிய வரி விதிப்பு.. நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

பழைய வரி முறையின் கீழ், வரி செலுத்துவோர் ஐ-டி சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வரி சேமிப்பு முதலீடுகளில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரிச் சலுகைகளைப் பெறலாம்.

1500 companies created with fake documents have been found in Chennai
சென்னையில் போலியான ஆவணங்கள் கொடுத்து உருவாக்கப்பட்ட 1500 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, வரி செலுத்துவோருக்கான தனிநபர் வருமான வரி கட்டமைப்பில் சில மாற்றங்களை முன்மொழிந்தார்.
வரி செலுத்துவோர் தங்கள் வரிப் பொறுப்பைக் குறைத்து மேலும் திறம்படச் சேமிக்க உதவுவதை இந்தப் பரிந்துரைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

பழைய வரி முறையின் கீழ், வரி செலுத்துவோர் ஐ-டி சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வரி சேமிப்பு முதலீடுகளில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரிச் சலுகைகளைப் பெறலாம்.
மறுபுறம், வரி செலுத்துவோர் புதிய வரி முறையின் கீழ் குறைக்கப்பட்ட வரி விகிதங்களிலிருந்து பயனடையலாம், ஆனால் அவர்களால் பெரும்பாலான வருமான வரி விலக்குகள் மற்றும் பிரிவு 80C அல்லது பிரிவு 80D வரிச் சலுகைகள் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

இருப்பினும், வரி செலுத்துவோர் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்த பிறகும், 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் 80CCD(2) பிரிவின்படி அனுமதிக்கப்பட்ட விலக்கைப் பயன்படுத்தலாம்.

இந்த நிலையில் வரி செலுத்துவோர் பழைய வரி முறையை கைவிட்டுவிட்டு புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா? 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் புதிய வரி முறைக்கு என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

புதிய வரி விதிப்பு முறையை வரி செலுத்துவோருக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, 2023-24 பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டம், 1961 இல் சில முக்கிய மாற்றங்களை முன்மொழிகிறது.
பழைய வரி முறை முதலீடுகள் மற்றும் காப்பீட்டின் அடிப்படையில் சலுகைகளை வழங்குகிறது மற்றும் இந்த விலக்குகளை நடைமுறைப்படுத்திய பிறகு வரி விதிக்கப்படுகிறது.

புதிய வரி விதிப்பின் கீழ் தள்ளுபடி வரம்பு

வரிச் சட்டங்களில் முன்மொழியப்பட்ட முதல் மாற்றம் வருமான வரித் தள்ளுபடி தொடர்பானது. தற்போது ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறைகளில் வருமான வரி செலுத்துவதில்லை.
புதிய வரி விதிப்பில் தள்ளுபடி வரம்பை ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், புதிய வரி விதிப்பில், 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள், எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.

பழைய வரி முறையிலேயே இருக்க விரும்புபவர்கள் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்தில் வரிச் சலுகையைப் பெறுவார்கள்.

அதாவது, சட்டத்தின் பிரிவு 87A இன் விதிகளின்படி, மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் வரி செலுத்துபவருக்கு, செலுத்த வேண்டிய வருமான வரித் தொகையில் 100 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது,

புதிய வரி விதிப்பு

புதிய வரி விதிப்பில் வரி கட்டமைப்பை மாற்ற, ஸ்லாப்களின் எண்ணிக்கையை ஐந்தாக குறைத்து, வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார். பழைய வரி விதிப்பில், விலக்கு வரம்பு 2.5 லட்சமாக இருக்கும்.
இது, அனைத்து வரி செலுத்துவோருக்கும் இது பெரும் நிவாரணம் அளிக்கும். ஆண்டு வருமானம் ரூ.9 லட்சம் உள்ள தனிநபர் ரூ.45,000 மட்டுமே செலுத்த வேண்டும்.

இது அவரது வருமானத்தில் 5 சதவீதம் மட்டுமே. ரூ.15 லட்சம் வருமானம் உள்ள தனிநபர் ரூ.1.5 லட்சம் அல்லது அவரது வருமானத்தில் 10 சதவீதத்தை மட்டுமே செலுத்த வேண்டும், தற்போதுள்ள ரூ.1,87,500-ல் இருந்து 20 சதவீதம் குறைக்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Fm proposes to make new tax regime a default option should you opt