Advertisment

சென்னை ஃபாக்ஸ்கான் ஐபோன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்; காரணம் என்ன?

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் நிறுவன பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Foxconn to expand Chennai iPhone facility

ஃபாக்ஸ்கான், சென்னைக்கு அருகிலுள்ள அதன் தளத்தில் இரண்டு புதிய கட்டடங்கள் கட்டியுள்ளது.

ஆப்பிள் ஐபோன் தயாரிப்பாளரான ஃபாக்ஸ்கான், சென்னைக்கு அருகிலுள்ள அதன் தளத்தில் இரண்டு புதிய கட்டடங்கள் கட்டியுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் அதன் உற்பத்தி வசதியை விரிவுபடுத்த வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டில் ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவவும் வாய்ப்புகள் உள்ளன.

Advertisment

தொடர்ந்து, ஃபாக்ஸ்கான் உருவாக்க விரும்பும் இரண்டு புதிய வசதிகள், அவர்கள் ஏற்கனவே சென்னை தளத்தில் கட்டிய மற்ற இரண்டு கட்டிடங்களுடன் கூடுதலாக இருக்கும்.

இருப்பினும், ஃபாக்ஸ்கானின் உற்பத்தி திறன் விரிவாக்கத் திட்டங்கள் இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளின் ஏற்றுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பால் விளைந்துள்ளன என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், மார்ச் மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கான ஏற்றுமதி கடுமையாக அதிகரித்தது, அங்கு கிட்டத்தட்ட 2.5 மில்லியன் ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன, அவற்றில் 1.3 மில்லியன் அமெரிக்காவிற்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், அடுத்த மூன்று-நான்கு ஆண்டுகளில் ஐபோன்களின் உலகளாவிய உற்பத்தியில் 20-25% இந்தியாவில் நடக்க வேண்டும் என்று ஆப்பிள் விரும்புகிறது என்றும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment