தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி வசதியை உருவாக்க ரூ.1,600 கோடி முதலீடு செய்யப்போவதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் திங்கள்கிழமை (ஜலை 31) அறிவித்துள்ளது.
இதனால் 6,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பை தொடர்ந்து நடந்துள்ளது.
இதற்கிடையில், 2022-23 நிதியாண்டில், தமிழ்நாடு அதன் ஏற்றுமதி கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து 5.37 பில்லியன் டாலராக இருந்தது மற்றும் நாட்டின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 22.8 சதவீத பங்களிப்பை அளித்துள்ளது.
பெங்களூருக்கு அருகில் உள்ள கர்நாடகாவின் துமகுருவில் ரூ.8,800 கோடி மதிப்பீட்டில் ஒரு யூனிட்டை நிறுவ எஃப்ஐஐயின் முந்தைய முன்மொழிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கருத்துப்படி, தமிழகத்தில் ஃபாக்ஸ்கானின் நிலையான முதலீடு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொழில் தொடங்க நாட்டிலேயே உகந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை காட்டுகின்றன” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“