முறையான திரும்பப் பெறுதல் திட்டம் (SWP) பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள் ஒரு நிலையான தொகையை முன்னரே தீர்மானிக்கப்பட்ட தேதியில் திரும்பப் பெற அனுமதிக்கிறது.
முறையான திரும்பப் பெறுதல் திட்டம் (SWP) பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள் ஒரு நிலையான அல்லது மாறக்கூடிய தொகையை முன்னரே தீர்மானிக்கப்பட்ட தேதியில் திரும்பப் பெற அனுமதிக்கிறது.
ஒவ்வொரு மாதமும், காலாண்டு அல்லது வருடமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பணம் செலுத்தலாம். மியூச்சுவல் ஃபண்ட் SWP இன் பலனை பெற, முதலீட்டாளர்கள் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
இது SWPயின் காலத்தில் வருமானத்தை ஈட்டும் மற்றும் முன்பே தீர்மானிக்கப்பட்ட இடைவெளியில் ஒரு நிலையான தொகையை வழங்கும்.
இருப்பினும், SWP மூலம் நீங்கள் திரும்பப் பெறக்கூடிய தொகை பெரும்பாலும் பின்வரும் காரணிகளைப் பொறுத்தது.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் 100,000 யூனிட்களை வாங்குவதற்கு, அதன் NAV ரூ. 10 ஆக இருக்கும்போது, மொத்தமாக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு உங்களுக்கு ரூ.10 லட்சம் (1,00,000×10) செலவாகும். நிதியில் இருந்து SWP மூலம் மாதம் ரூ.10,000 எடுக்க முடிவு செய்துள்ளீர்கள்.
முதல் மாதத்தில் NAV ரூ.10 ஆக இருக்கும் போது, ஃபண்ட் ஹவுஸ் 1000 யூனிட்களை மீட்டு உங்களுக்கு ரூ.10,000 கொடுக்கும். திட்டத்தில் இன்னும் 99000 யூனிட்கள் மீதம் இருக்கும்.
இரண்டாவது மாதத்தில், ஃபண்டின் என்ஏவி ரூ.12 ஆக அதிகரித்தால், ரூ.10,000 செலுத்துவதற்காக மீட்டெடுக்கப்படும் யூனிட்களின் எண்ணிக்கை 833 (10,000/12) யூனிட்களாக இருக்கும். இப்போது உங்களிடம் 98,167 யூனிட்கள் மீதம் இருக்கும்.
ஓய்வூதியத்திற்குப் பிறகு 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1 லட்சத்தைப் பெற, எதிர்பார்க்கப்படும் வருடாந்திர வருமானம் 10% என்றால், நீங்கள் ரூ. 1,25,50,000 முதலீடு செய்ய வேண்டும் என்று கால்குலேட்டர் காட்டுகிறது. 25 வருடங்கள் முடிவடைந்தாலும் உங்கள் கணக்கில் ரூ.1.26 கோடி மீதம் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“