சோடியன் எனர்ஜி நிறுவனம் மற்றும் ஏ.ஆர்.4 டெக் ஆகியோர் இணைந்து இந்தியாவில் சோடியன் அயன் பேட்டரிகள் அறிமுகம் செய்துள்ளன.
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. அப்போது, சோடியன் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாலா பச்சைப்பா, தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இன்னும் சில ஆண்டுகளில் வீடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சோலார் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எதிர்கால சந்தை கருதி இந்த புதிய சோடியன் அயன் பேட்டரிகளை அறிமுகம் செய்துள்ளோம். அதிக சுமைகளை கொண்டு செல்லும் மின்சார வாகனங்களுக்கு வேகமான சார்ஜிங் மற்றும் அதிக டிஸ்சார்ஜ் விகிதங்கள் தேவைப்படுகின்றன. அதற்கு இந்த பேட்டரிகள் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்” என்றார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“