வரி விலக்கை பிரதானமாக கருதி முதலீட்டு திட்டத்தை தேடும் நபர்களுக்கு பொதுமக்கள் வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund - PPF)) முதன்மை திட்டமாக உள்ளது.
- யாரெல்லாம் கணக்கு தொடங்கலாம்
18 வயது பூர்த்தியான தனிநபர் தனது பெயரிலும், 18 வயது பூர்த்தியாகாத நபர்கள் பாதுகாவலர் ஒவரை நியமித்தும் நாட்டில் உள்ள எந்த வங்கி அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் கணக்கை தொடங்கலாம்.
- டெபாசிட்
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தப்பட்சம் ரூ.500 முதல் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். பணத்தை ரொக்கம் அல்லது காசோலையாக முதலீடு செய்யலாம்.
இதற்கு 80 சி பிரிவின் கீழ் வருவான வரிச் சட்டத்தில் வரி விலக்கு அனுமதிக்கப்படுகிறது.
- கணக்கை முடித்துக் கொள்ளுதல்
எந்தவொரு நிதியாண்டிலும், குறைந்தபட்சம் 500 ரூபாய் டெபாசிட் செய்யவில்லை என்றால், அந்த பிபிஎஃப் கணக்கு நிறுத்தப்படும். நிறுத்தப்பட்ட கணக்குகளில் கடன் அல்லது திரும்பப் பெறும் வசதி இல்லை.
முடக்கப்பட்ட கணக்கை புதுப்பிக்க பாலிசி சந்தா மற்றும் ஒவ்வொரு ஆண்டு செலுத்த தவறிய பாலிசிக்கு ரூ.50ம் கட்டணமும் சேர்த்து கட்ட வேண்டும்.
- வட்டி
காலாண்டு அடிப்படையில் நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட வட்டி பொருந்தும். ஐந்தாவது நாளின் முடிவிற்கும் மாத இறுதிக்கும் இடைப்பட்ட காலண்டர் மாதத்திற்கான வட்டியானது கணக்கில் உள்ள மிகக் குறைந்த இருப்பில் கணக்கிடப்படும்.
திட்டத்தில் கிடைக்கும் வருமான வட்டிக்கும் வரி கிடையாது.
- திரும்ப பெறுதல்
கணக்கு தொடங்கிய ஆண்டைத் தவிர்த்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளர் ஒருமுறை திரும்பப் பெறலாம். 4ஆவது ஆண்டின் இறுதியில் அல்லது அதற்கு முந்தைய ஆண்டின் இறுதியில், எது குறைவாக இருந்தாலும், திரும்பப் பெறுவதற்கான தொகையில் 50% நிலுவைத் தொகையைப் பெறலாம்.
- முதிர்ச்சி
பிபிஎஃப் கணக்கு 15 ஆண்டுகளில் முதிர்ச்சி பெறும். கணக்கை நீட்டிக்க வேண்டும் என்றால் விருப்பத்தை பொறுத்து நீட்டித்துக் கொள்ளலாம். முதலீட்டாளர் கணக்கை மூட வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அஞ்சல் அலுவலகத்தில் பாஸ்புக்-ஐ சமர்பிக்க வேண்டும்.
அதேபோல், தொடர்புடைய அஞ்சல் அலுவலகத்தில் பரிந்துரைக்கப்பட்ட நீட்டிப்புப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் முதலீட்டாளர் ஆணோ, பெண்ணோ தங்களது கணக்கை மேலும் 5 ஆண்டுகள் அல்லது கூடுதல் ஆண்டுகள் கூட நீட்டிக்க முடியும்.
மேலும், டெபாசிட்களுடன் கூடிய நீட்டிக்கப்பட்ட கணக்கில், 5 வருடத் தொகுதியில் முதிர்வு நேரத்தில் அதிகபட்ச வரம்பு 60% இருப்புக்கு உட்பட்டு ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒருமுறை திரும்ப பெறலாம்.
- முன்கூட்டியே மூடல் (Premature closure)
பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டின் இறுதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு முன்கூட்டியே மூடுவது அனுமதிக்கப்படும்.
அ) கணக்கு வைத்திருப்பவர், மனைவி அல்லது சார்ந்திருக்கும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான நோய் ஏற்பட்டால் கணக்கை முன்கூட்டியே மூடிக் கொள்ளலாம்..
ஆ) கணக்கு வைத்திருப்பவர் அல்லது சார்ந்திருக்கும் குழந்தைகளின் உயர் கல்விக்கு நிதி தேவைப்படும்பட்சத்தில் கணக்கை முன்கூட்டியே மூடிக் கொள்ளலாம்.
இ) கணக்கு வைத்திருப்பவரின் குடியுரிமை நிலை மாறினால் கணக்கு கண்டிப்பாக மூடப்படும். அதாவது என்ஆர்ஐ குடிமகனாக மாறினால் கணக்கை முன்கூட்டியே மூடிக் கொள்ளலாம்.
பிபிஎஃப் கணக்கை முன்கூட்டியே மூடும் பட்சத்தில் ஒரு சதவீத வட்டி கழிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil