koyambedu tamil vegetables tamil : சென்னையில் கடந்த 4 நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக காய்கறி விற்பனையில் மந்தம்ஏற்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையில் விலையும் குறைந்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிய ‘புரெவி'புயல் காரணமாகவும், அது வலு குறைந்து மன்னார் வளைகுடா பகுதியிலேயே நீடித்து வருவதாலும் சென்னையில் கடந்த 2-ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அவ்வப்போது பெய்யும் கனமழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அதன் காரணமாக சில்லறைவிற்பனை காய்கறி சந்தைகள் மற்றும் மளிகை, காய்கறி கடைகளில் விற்பனை சரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து கோயம்பேடு காய்கறிசந்தையிலும் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் நாசிக்கில் இருந்து கொண்டுவரப்படும் பெரியவெங்காயம் கிலோ ரூ.40, எகிப்து நாட்டு பெரிய வெங்காயம் கிலோரூ.25, கத்தரிக்காய், வெண்டைக்காய் தலா ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.32, தக்காளி, முருங்கைக்காய் தலா ரூ.35, கேரட் ரூ.65, பீட்ரூட் ரூ.15, அவரைக்காய் ரூ.40, புடலங்காய் ரூ.15, சின்ன வெங்காயம் ரூ.80 முள்ளங்கி ரூ.12 என நேற்று விலை குறைந்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”