LIC policy online : எல்ஐசி “மைக்ரோ பச்சத்” என்னும் புதிய நுண் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் எல்ஐசியின் புதிய மைக்ரோ பச்சத் திட்டமான நுண் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறைந்த தவணை முறையில் பிரீமியம் செலுத்தக்கூடிய எல்ஐசியின் மைக்ரோ பச்சத் காப்பீட்டுத் திட்டமானது, பங்குச்சந்தை சாராதது. அது மட்டும் இல்லாமல் எண்டோவ்மெண்ட் நுண் காப்பீட்டுத் திட்ட பாதுகப்பு, சேமிப்பை இணைத்து அளிக்கிறது.
இதுவரை நுண் காப்பிட்டுத் திட்டங்களில் 50,000 ரூபாய் வரை மட்டுமே காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த எல்ஐசி மைக்ரோ பச்சத் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய் வரை காப்பீடு அளிக்கப்படும்.
எல்ஐசியின் மைக்ரோ பச்சத் பாலிசிதாரர் பாலிசி காலத்திற்குள் இறக்க நேர்ந்தால் அவரது நாமினிக்கு காப்பீட்டுத் தொகை அளிக்கப்படும். இதுவே பாலிசி காலத்தை நிறைவு செய்யும் பாலிசிதாரர்களுக்கு முதிர்வுத் தொகை வழங்கப்படும்.
மூன்று ஆண்டு தொடர்ந்து பிரிமியம் செலுத்திய பாலிசிதாரர்களுக்கு உடனடி பண தேவைக்கு கடன் பெறும் வசதியும் உண்டு.
எல்ஐசியின் மைக்ரோ பச்சத் பாலிசியை வாங்குபவர்கள் வயது 18 முதல் 55-க்குள் இருக்கும் போது மருத்துவ பரிசோதனையின்றி இப்பாலிசி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் வரும் பாலிசிகளின் அடிப்படை காப்பீட்டுத் தொகை 50,000 ரூபாய் முதல் 2,00,000 ரூபாயை மிகாது.
உங்கள் பிள்ளைகளை கல்லூரியில் சேர்க்க பேங்கில் லோன் கேட்டு அலைகிறீர்களா? இதோ உங்களுக்கான வழி!
காலாவதியான பாலிசிகளுக்கு, மூன்று வருடங்கள் பிரீமியம் செலுத்தியிருந்தால் 6 மாதத்திற்கும், 5 வருடங்கள் பிரீமியம் செலுத்தியிருந்தால் 2 வருடத்திற்கும் தொடர் பாதுகாப்பு உண்டு.எல்ஐசியின் மைக்ரோ பச்சத் பாலிசி பிரீமியத்தை ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதத் தவணைகளில் செலுத்தலாம். கூடுதல் பிரீமியம் செலுத்தினால் விபத்து பாதுகாப்பு இணைப்பு, விபத்து பாதுகாப்பு மற்றும் உடல் ஊனம் இணைப்பையும் தேர்வு செய்துக்கொள்ளாம்.