இந்தியப் பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகளான தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி-50 மற்றும் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் திங்கள்கிழமை இரண்டு நாள் சரிவை முறியடித்தன.
இந்த நிலையில், சென்செக்ஸ் 0.41% உயர்ந்து 65,216.09 ஆகவும், நிஃப்டி 50 83 புள்ளிகள் அதிகரித்து 19,400 இல் 19,393.6 ஆகவும் நிலைபெற்றன.
பரந்த சந்தைகளில், நிஃப்டி நெக்ஸ்ட் 50 0.8% உயர்ந்து காணப்பட்டது. அதே நேரத்தில் ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் அளவுகோல்களும் அதிகரித்தன.
வங்கி நிஃப்டி 44,000 அளவை மீட்டெடுத்தது, தொடர்ந்து, நிஃப்டி ஐடி மற்றும் நிஃப்டி மெட்டல் ஆகியவை முறையே 1% அதிகமாக முடிவடைந்தன. நிஃப்டி PSU வங்கி 0.6%க்கு மேல் நஷ்டமடைந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“