Advertisment

நிஃப்டி 30, சென்செக்ஸ் 160 புள்ளிகள் உயர்வு: மாருதி சுசூகி, பிபிசிஎல் பங்குகள் சரிவு

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 160 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

author-image
WebDesk
New Update
Nifty settles above 19400 Sensex gains 160 pts

உள்நாட்டு குறியீடுகள் வியாழக்கிழமை அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.

இந்தியப் பங்குச் சந்தை உள்நாட்டு குறியீடுகள் வியாழக்கிழமை அமர்வை பச்சை நிறத்தில் முடித்தன.

தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 29.45 புள்ளிகள் அல்லது 0.15% முன்னேறி 19,413.75 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 164.99 புள்ளிகள் அல்லது 0.25% அதிகரித்து 65,558.89 ஆகவும் காணப்பட்டது.

Advertisment

துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 25.60 புள்ளிகள் அல்லது 0.06% உயர்ந்து 44,665.05 ஆக காணப்பட்டது. தொடர்ந்து, நிஃப்டி ஐடி 1.75% உயர்ந்தும், நிஃப்டி ரியாலிட்டி 1.02% உயர்ந்ததும் காணப்பட்டது.

எனினும், நிஃப்டி ஆட்டோ 0.68%, நிஃப்டி பார்மா 0.43%, நிஃப்டி பொதுத்துறை வங்கி 2.38%, நிஃப்டி ஆயில் & கேஸ் 1.17% சரிந்து காணப்பட்டது.

டிசிஎஸ், ஹிண்டால்கோ, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

பவர் கிரிட், கோல் இந்தியா, யுபிஎல், மாருதி சுசுகி மற்றும் பிபிசிஎல் ஆகியவை நஷ்டமடைந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stock Market Nse Nifty Sensex Bombay Stock Exchange
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment