இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (ஜூலை 6) அமர்வை லாபத்தில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 98.80 புள்ளிகள் அல்லது 0.51% உயர்ந்து 19,497.30 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 339.60 புள்ளிகள் அல்லது 0.52% உயர்ந்து 65,785.64 ஆகவும் காணப்பட்டது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 188.10 புள்ளிகள் அல்லது 0.42% உயர்ந்து 45,339.90 ஆகவும், நிஃப்டி ஆட்டோ 1.12% உயர்ந்தும் காணப்பட்டது.
தொடர்ந்து நிஃப்டி பார்மா 0.72% மற்றும் நிஃப்டி ரியாலிட்டி 2.25% உயர்ந்து இருந்தது.
தேசிய பங்குச் சந்தையில், மஹிந்திரா & மஹிந்திரா, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) அதிக லாபம் ஈட்டின.
ஐஷர் மோட்டார்ஸ், எச்டிஎஃப்சி லைஃப், மாருதி சுஸுகி, எச்சிஎல் டெக் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை நஷ்டமடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“