இந்திய அஞ்சல் பல்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்குகிறது. கூடுதலாக, பெரும்பாலான அஞ்சல் அலுவலக முதலீட்டுத் திட்டங்கள் பிரிவு 80C இன் கீழ் வருகின்றன, இது ரூ.1,50,000 வரை வரி விலக்கு அளிக்க அனுமதிக்கிறது.
மேலும், அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் நீண்ட காலப் பலன்கள் காரணமாக முதலீட்டாளரின் பணத்தை இரட்டிப்பாக்கும் திறன் கொண்டவை.
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்), தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்எஸ்சி), கிசான் விகாஸ் பத்ரா, தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்கள் தபால் அலுவலகம் வழங்குகிறது.
இந்தத் திட்டங்களை இந்தியாவில் உள்ள எந்தத் தபால் அலுவலகக் கிளைகளுக்கும் சென்று பெறலாம்.
கிஷான் விகாஸ் பத்ரா
இந்தத் திட்டம் முதலீட்டாளரின் பணத்தை 10 ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்களில் ஆண்டுக்கு 7.5% வட்டி விகிதத்தில் இரட்டிப்பாக்குகிறது.
குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 10,000 மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகை ஒவ்வொரு 115 மாதங்களுக்குப் பிறகு இரட்டிப்பாகும்.
ஒற்றை மற்றும் கூட்டு கணக்குகளை முதலீட்டாளர்கள் தொடங்கலாம். கேவிபி திட்டத்தின் கீழ், பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பெயரிலும் முதலீட்டுக் கணக்கைத் திறக்கலாம். முதலீட்டாளர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களையும் தேர்ந்தெடுக்கலாம்.
தேசிய சேமிப்பு சான்றிதழ்
தேசிய சேமிப்பு சான்றிதழ் குறைந்தபட்ச முதலீடு ரூ. 1000 ஆகும், அதிகபட்ச முதலீட்டுத் தொகை இல்லை. 100, 500, 1,000, 5,000 மற்றும் 10,000 ரூபாய் அளவுகளில் முதலீடுகள் கிடைக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“