sbi yono : யோனோ கேஷ் செயலி மூலம் ஏடிஎம்- களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அதன் புதுயுக டிஜிட்டல் வங்கியான யோனோ-வை, நவம்பர் 2017-ல் ஆரம்பித்தது. அன்று முதல், யோனோ, வங்கி மற்றும் வாழ்க்கைத் தேவைகளுக்கான ஒற்றைத் தீர்வாக செயல்படுவதுடன் டிஜிட்டல் வங்கி சேவைக்கான விரிவான, ஒரே தளமாகவும் இருக்கிறது.
நவீன வாடிக்கையாளருடன் இணைந்து இலகுவாக வங்கிச் சேவை தர வேண்டும் என்ற வங்கியின் மரபை யோனோ பிரதிபலிக்கிறது. தங்கள் வசதிக்கேற்றவாறு இருந்த இடத்திலிருந்தே டிஜிட்டல் தளத்தில் வங்கி சேவைகளைப் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக யோனோ செயல்படுகிறது.
அந்த வகையில் யோனோ செயல்பாடு இப்போது அடுத்த தளத்திற்கு சென்றுள்ளது. ஆம் யோனோ கேஷ் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் - களில் கார்டு இல்லாமலே பணப்பவர்த்தனை செய்யலாம்.
இந்தியாவிலேயே கார்டு இல்லா ஏடிஎம் பரிவர்த்தனை செய்யும் முதல் வங்கி என்ற பெயரை பெறுகிறது எஸ்பிஐ. இந்த வசதி இந்தியா முழுவதும் 16,500 ஏடிஎம்-களில் பயன்பாட்டிற்கு வருகிறது.
read more.. நீங்கள் வீடு கட்ட குறைந்த வட்டியில் லோன் தரும் வங்கிகளில் லிஸ்ட் இதோ!
இந்த வசதியை நீங்களும் பெறலாம். வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பெற யோனோ ஆப்பை முதலில் டவுன்லோட் செய்ய வேண்டும். பின்பு 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும்.
இந்த எண் நீங்கள் பதிவு செய்துள்ள மொபைலுக்கு மெசேஜாக வரும். இந்த எண்கள் தான் உங்கள் அதிகாரப்பூர்வ யோனோ கேஷ் எண். அதன் பின்பு உங்கள் அருகாமையில் இருக்கும் யோனோ கேஷ் பாயிண்டில் உங்கள் இலக்க எண் மற்றும் பாஸ்வேர்ட்டை பதிவு செய்து தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.