முதியோருக்கான போஸ்ட் ஆபிஸ் எஸ்.சி.எஸ்.எஸ். திட்டம்: கணக்குதாரர் இறந்தால் நாமினிக்கு வட்டி எவ்வளவு கிடைக்கும்?

அருகிலுள்ள அஞ்சல் நிலையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் படிவம் 'A' பூர்த்தி செய்து, ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களுடன் கொடுத்து எளிதாகத் துவங்கலாம்.

அருகிலுள்ள அஞ்சல் நிலையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் படிவம் 'A' பூர்த்தி செய்து, ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களுடன் கொடுத்து எளிதாகத் துவங்கலாம்.

author-image
abhisudha
New Update
Post office

Senior Citizen Savings Scheme 2025 SCSS interest rate Post Office SCSS Senior Citizen investment

ஓய்வு பெற்ற பிறகு நிம்மதியான, நிலையான வருமானம் வேண்டுமா? கையில் இருக்கும் பணத்தை எங்கே போட்டால் பாதுகாப்பும், உறுதியான வட்டியும் கிடைக்கும் என்று யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம்! இந்திய அரசு அங்கீகரித்துள்ள மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS - Senior Citizen Savings Scheme) தான் ஓய்வூதியதாரர்களுக்கான சிறந்த சாய்ஸ்.

Advertisment

இந்தத் திட்டம் 2025-26 நிதியாண்டில் 8.2% என்ற கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தை வழங்குவதுடன், உங்கள் முதலீட்டுக்கு அரசு உத்தரவாதமும் அளிக்கிறது. ஓய்வுக் காலத்தில் நிலையான பணப்புழக்கத்தை உறுதி செய்ய, நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் 8 முக்கிய அம்சங்கள் இங்கே!
 
8 முக்கிய அம்சங்கள்: நிலையான வருமானத்திற்கான வழி!

அதிக வட்டி விகிதம்: 2025-26 நிதியாண்டில் 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி காலாண்டுக்கு ஒருமுறை உங்கள் கணக்கில் செலுத்தப்படும்.

காலக்கெடு (Tenure): இத்திட்டத்தின் ஆரம்ப காலக்கெடு 5 ஆண்டுகள். இதை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.

Advertisment
Advertisements

முதலீட்டு வரம்பு: குறைந்தபட்சம் ₹1,000 முதல் அதிகபட்சம் ₹30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

யார் தகுதியானவர்கள்?:

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும்.

55 முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியப் பலன் கிடைத்த 1 மாதத்திற்குள் முதலீடு செய்ய வேண்டும்.

ராணுவ பணியாளர்கள் (50 வயதுக்கு மேல்).

வரிச் சலுகை: இத்திட்டத்தில் செய்யும் முதலீடுகளுக்கு, ஆண்டுக்கு ₹1.5 லட்சம் வரை பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு பெறலாம். (ஆனால், வட்டி வருமானம் முழுமையாக வரிக்கு உட்பட்டது).

கணக்குத் துவக்கம்: அருகிலுள்ள அஞ்சல் நிலையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் படிவம் 'A' பூர்த்தி செய்து, ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களுடன் கொடுத்து எளிதாகத் துவங்கலாம்.

முன்கூட்டியே மூடுதல் (Premature Closure): அபராதத்துடன் அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், முன்கூட்டியே பணம் எடுக்கும் போது 1% முதல் 1.5% வரை அபராதம் விதிக்கப்படும்.

தாராளமான நாமினி வசதி: கணக்கு வைத்திருப்பவர் இறக்கும் பட்சத்தில், நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு எளிதாகப் பணம் வழங்கப்படும். இறப்பு தேதி வரைஎஸ்.சி.எஸ்.எஸ். (SCSS) வட்டியும், அதற்குப் பிறகு அஞ்சலக சேமிப்புக் கணக்கு வட்டியும் வழங்கப்படும். (இறப்பு நேர்ந்தால் முன்கூட்டியே மூடுவதற்கான அபராதம் கிடையாது).

ஓய்வூதியப் பணம் வங்கிக் கணக்கிலேயே முடங்கிக் கிடக்கிறதா? உடனே மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்து, அதிக வட்டியுடன் நிலையான காலாண்டு வருமானத்தைப் பெறுங்கள்!

Post Office Savings Scheme

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: