/tamil-ie/media/media_files/uploads/2022/09/Markets-Reuters.webp)
பங்குச் சந்தை இன்றைய நிலவரம் மார்ச் 23 2022
இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த போதிலும் பார்தி ஏர்டெல், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தில் வணிகத்தை நிறைவு செய்தன.
திங்கள்கிழமை வர்த்தகத்தில் 30 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) சென்செக்ஸ் 491.01 (0.85%) புள்ளிகள் உயர்ந்து 58,410.98 என வர்த்தகத்தை நிறைவு செய்தது.
தொடர்ந்து 50 பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) நிஃப்டி 126.10 (0.73%) சதவீதம் உயர்ந்து 17,311.820 என வணிகத்தை நிறைவு செய்தது.
மும்பை பங்குச் சந்தையில் பார்தி ஏர்டெல் அதிர்ச்சியளிக்கும் வகையில் 0.02 சதவீதம் சரிந்தது. அதிகப்பட்சமாக லார்சன் அண்ட் டர்போ நிறுவன பங்குகள் 1.45 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.
அதேபோல், ஹெச்சிஎல் டெக், பவர் கிரிட் கார்ப், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவன பங்குகளும் சரிந்தன.
அதேநேரம் ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, கோடக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் லாபம் பார்த்தன.
தேசிய பங்குச் சந்தையில், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தில் வணிகமாகின.
அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், பிபிசிஎல், பிரிட்டானியா, கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் நஷ்டத்தில் வணிகமாகின. இந்திய பங்குச் சந்தைகள் இன்றைய வர்த்தகத்தில் 0.80 சதவீதம் வரை உயர்வைக் கண்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.