scorecardresearch

சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்வு; டாடா ஸ்டீல் முன்னணி

இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்தன.

Today Nifty and Sensex 18 January 2023
பங்குச் சந்தை இன்றைய நிலவரம் ஜனவரி 18 2023

இந்திய பங்குச் சந்தை ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமை பச்சை நிறத்தில் முடிவடைந்தன. மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 390.02 புள்ளிகள் அல்லது 0.64% உயர்ந்து 61,045.74 ஆகவும், நிஃப்டி 50 112.05 புள்ளிகள் அல்லது 0.62% உயர்ந்து 18,165.35 ஆகவும் முடிந்தது.
துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 0.55%, நிஃப்டி ஐடி 0.41% மற்றும் நிஃப்டி பார்மா 0.66% அதிகரித்தன. நிஃப்டி 50 இன் அதிக லாபம் ஈட்டிய பட்டியலில் ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், லார்சன் & டூப்ரோ, யுபிஎல் மற்றும் விப்ரோ ஆகியவை காணப்பட்டன.

டாடா மோட்டார்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் பிபிசிஎல் ஆகியவை அதிக நஷ்டம் அடைந்தன.
மேலும், பிஎஸ்இ சென்செக்ஸ் 390.02 புள்ளிகள் அல்லது 0.64% உயர்ந்து 61,045.74 ஆகவும், நிஃப்டி 50 112.05 புள்ளிகள் அல்லது 0.62% உயர்ந்து 18,165.35 ஆகவும் முடிந்தது.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள் புதன்கிழமை லாபத்தில் நிறைவுற்றன. ஜப்பானின் நிக்கேய் 225 652.44 புள்ளிகள் அல்லது 2.50% உயர்ந்து 26,791.12 ஆகவும், ஹாங்காங்கின் ஹாங் செங் 100.36 புள்ளிகள் அல்லது 0.47% முன்னேறி 21,678.00 ஆகவும், சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீட்டு எண் 4,12 0 ஆகவும் காணப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Sensex gains 390 pts tata steel wipro top gainers

Best of Express