/tamil-ie/media/media_files/uploads/2022/07/Share.jpg)
இந்திய பங்குச் சந்தை நிலவரம்
Share Market Today: வாரத்தின் மூன்றாம் நாளான இன்று (அக்.12- புதன்கிழமை) இந்திய பங்குச் சந்தைகள் லாபத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை பி.எஸ்.இ சென்செக்ஸ் 478.59 புள்ளிகளும் (0.84 சதவீதம்), தேசிய பங்குச் சந்தை என்.எஸ்.இ., நிஃப்டி 140.05 (0.82 சதவீதம்) புள்ளிகளும் உயர்ந்து காணப்பட்டன.
20 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தையில், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்.சி.எல்., டெக், ஹெச்.சி.எஃப்.சி., நிறுவன பங்குகள் லாபத்திலும், ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஐசிஐசிஐ வங்கி மற்றும் டைட்டன் கோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்திலும் வணிகமாகின.
தேசிய பங்குச் சந்தையில், அதானி என்டர்பிரைசஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டிஸ் லேப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்திலும், அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தையும் சந்தித்தன.
நேற்று பங்குச் சந்தைகள் 1.45 சதவீதத்துக்கும் மேல் நஷ்டத்தில் நிறைவுற்ற நிலையில், இன்று 0.80 சதவீதத்துக்கும் மேல் இரு சந்தைகளும் உயர்ந்துள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.