/tamil-ie/media/media_files/uploads/2022/10/bse-sensex-nse-nifty-express-archive-1200.jpg)
பங்குச் சந்தை இன்றைய நிலவரம் ஜனவரி 18 2023
இன்றைய பங்கு வர்த்தக நிறைவில் மும்பை பங்குச் சந்தை 203 புள்ளிகள் உயர்வை கண்டது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.
30 பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள மும்பை பங்குச் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், ஹெச்.டி.எஃப்.சி., ஹெச்.டி.எஃப்.சி., வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ்இந்த் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, லார்சன் அண்ட் டர்போ, மகிந்திரா அண்ட் மகிந்திரா, மாருதி சுசூகி, நெஸ்லே, என்டிபிசி, பவர் கிரிட் கார்ப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், டைடன் கோ, அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தில் வணிகமாகின.
மறுபுறம் ஆக்ஸிஸ் வங்கி, டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, எஸ்பிஐ, சன் பார்மா, டாடா ஸ்டீல், டெக் மகிந்திரா உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தை
தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்திலும், அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட் அண்ட் ஸ்பெஷல், ஆக்ஸிஸ் வங்கி, பார்த்தி ஏர்டெல், பிபிசிஎல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
சந்தைகள் உயர்வு
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 0.34 சதவீதம் உயர்ந்து 59959.85 எனவும் தேசிய பங்குச் சந்தை 0.28 சதவீதம் உயர்ந்து 17786.80 எனவும் வணிகத்தை நிறைவு செய்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.