/tamil-ie/media/media_files/uploads/2022/09/Markets-Reuters.webp)
பங்குச் சந்தை இன்றைய நிலவரம் மார்ச் 23 2022
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை பி.எஸ்.இ., சென்செக்ஸ் 0.18 சதவீதம் உயர்ந்து 59307.15 ஆகவும், தேசிய பங்குச் சந்தை என்.எஸ்.இ., நிஃப்டி 0.07 சதவீதம் உயர்வு கண்டு 17,576.30 எனவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஆக்ஸிஸ் வங்கி பங்குகள்
இன்றைய பங்கு வர்த்தகத்தில் ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 8.96 சதவீதமும், தேசிய பங்குச் சந்தையில் 9.03 ஆகவும் உயர்வை கண்டது.
தற்போது ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் ரூ.900.25 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் ரூ.900.40 ஆகவும் உள்ளது.
தேசிய பங்குச் சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், பார்தி ஏர்டெல், பிபிசிஎல், பிரிட்டானியா நிறுவன பங்குகள் லாபத்திலும், அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ் நஷ்டத்தையும் சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையில் பார்தி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக், இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி பங்குகள் லாபத்திலும், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தையும் சந்தித்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.