வாடிக்கையாளர்களை கவரும் வகையில், வோடஃபோன் நிறுவனம் ரூ 299 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடர் காலிங் வசதி மற்றும் டேட்டா வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணியாக திகழும் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் சமீப காலமாக, ஜியோ நிறுவனத்துடன் நேரடியாக களத்தில் போட்டி போட்டு வருகிறது. டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்னரே, பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. 2ஜி மற்றும் 3ஜி சேவையை பயன்படுத்தி வந்த அதிகப்படியான வாடிக்கையாளர்கள் ஜியோ வருகைக்கு பின்னர், அதிரடியாக 4ஜி சேவைக்கு மாறினர்.
அதன் பின்பு, மற்ற நிறுவனங்களும் 4ஜி சேவையை வழங்க முடிவு செய்தனர். இருப்பினும், சந்தையில், பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகின்றன. இதனை சற்றும் எதிர்பார்க்காத வோடஃபோன் தொடர்ந்து புதிய புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ரூ. 299 ரீசார்ஜ் திட்டம் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வாடிக்கையாளர்கள் ரூ. 299 ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 56 நாட்களுக்கு செயல்படும் அன்லிமிடட் காலிங், நாள் ஒன்றுக்கு 100 இலவச குறுங்செய்திகள் மற்றும் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா ஆகிவயற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. வோடஃபோனின் இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் என்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது என்பதை அந்நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை.