Advertisment

ஐ.ஐ.டி, என்.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 98 மாணவர்கள் தற்கொலை; மத்திய அரசு

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் 98 மாணவர்கள் தற்கொலை; இந்த ஆண்டு இதுவரை 20 பேர் தற்கொலை

author-image
WebDesk
New Update
student suicide

2022 இல் மாணவர்களின் தற்கொலைகள் 24 ஆக அதிகரித்தது மற்றும் 2023 இன் முதல் ஏழு மாதங்களில் 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். (பிரதிநிதித்துவ படம். ஆதாரம்: Pixabay)

2023 ஆம் ஆண்டில் ஏழு மாதங்களில், மத்திய கல்வி நிறுவனங்களில் பயின்று தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் குறைந்தது 20 வழக்குகளை அரசாங்கம் பதிவு செய்துள்ளது. இதற்கான அறிக்கையை கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

Advertisment

கேரளாவைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் சுபாஸ் சர்க்கார் பதிலளித்தார். எம்.பி சிவதாசன், மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில் தற்கொலையால் இறந்தவர்களின் எண்ணிக்கையை, சமூகப் பிரிவு மற்றும் பொருளாதாரப் பிரிவு வாரியாக, கடந்த 5 ஆண்டுகளாக ஆண்டு வாரியான தரவுகள் குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையும் படியுங்கள்: தேசிய கல்விக் கொள்கை மூலம் தொழில் சார்ந்த படிப்புகளையும் கற்பித்து வருகிறோம்; புதுச்சேரி கே.வி பள்ளி முதல்வர்

பதிவுசெய்யப்பட்ட தரவுகளின்படி, 2018 ஆம் ஆண்டில் 21 மாணவர்கள் தற்கொலையால் இறந்துள்ளனர் (மத்திய பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி.,கள், என்.ஐ.டி.,கள், ஐ.ஐ.ஐ.டி.,கள், ஐ.ஐ.எம்.,கள் மற்றும் ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,களில் படித்தவர்கள்), இது 2019 இல் 19 ஆகவும், 2020 இல் 7 ஆகவும், 2021 இல் 7 ஆகவும் குறைந்து இருந்தது.

இருப்பினும், 2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது மற்றும் 2023 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், ஐ.ஐ.டி.,கள் 8 தற்கொலை வழக்குகளைப் பதிவு செய்துள்ளன, பின்னர் 2020 மற்றும் 2021 இல் 3 மற்றும் 4 ஆகக் குறைந்துள்ளது. 2022 இல் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது, மேலும் இந்த ஆண்டு இதுவரை 7 வழக்குகள் பதிவாகி உள்ளன. மத்திய பல்கலைக்கழகங்களிலும், 2018 இல் 8 வழக்குகளும், 2019 மற்றும் 2020 இல் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. 2021 இல் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், 2022 இல் 4 வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் இந்த ஆண்டு இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் (ADSI), 2021, தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) அறிக்கையின்படி, தொழில்/ வேலை பிரச்சனைகள், தனிமை உணர்வு, துஷ்பிரயோகம், வன்முறை, குடும்பப் பிரச்சனைகள், மனநல கோளாறுகள் போன்ற பல்வேறு காரணங்கள் தற்கொலைக்கான காரணங்களாக உள்ளன,” என்று அமைச்சர் சுபாஸ் சர்க்கார் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020, கல்வி நிறுவனங்களில் மன அழுத்தம் மற்றும் உணர்ச்சி ரீதியான மாற்றங்களைக் கையாள்வதற்கான ஆலோசனை அமைப்புகளை வழங்குகிறது என்று அரசாங்கம் கூறியது. “COVID இன் போதும் அதற்குப் பின்னரும் மனநலம் மற்றும் நல்வாழ்வு பிரச்சினையைத் தீர்க்க, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) 05.04.2020 அன்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு (HEIs) ஆலோசனைகளை வழங்கியது. UGC உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் உடல்நலம், நலன், உளவியல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வு, உடல் தகுதி, விளையாட்டு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது,” என்று அமைச்சர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iit Iim
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment