அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தொடர்பாக மாநில அரசு காலக்கெடுவை நீட்டிக்க கோரினால், அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய உயர்கல்வி செயலாளர் அமித் கரே தெரிவித்தார்.
உலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களை கொண்டு செல்லும் நோக்கில், மத்திய அரசு 'எமினென்ஸ் இன்ஸ்டிடியூட்' எனும் திட்டத்தை கொண்டுவந்தது. இந்த திட்டத்தின் கீழ் சிறப்பு அந்தஸ்து பெரும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்க்கு சிறப்பு அந்தஸ்து வழங்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்தது. இருப்பினும்,மத்திய அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மத்திய அரசு 500 கோடி வழங்கும் என்றும் , மீதமுள்ள ரூ.500 கோடியை தமிழக அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று புது நிபந்தனையை விடுத்தது.
சிறப்பு அந்தஸ்தை ஏற்பது குறித்த தனது முடிவினை வரும் 31-ஆம் தேதிக்குள் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதியது. அதில்,"அண்ணாப் பல்கலைக்கழகம் மாநில அரசின் கீழ் செயல்படுகிறது. எனவே,எமினென்ஸ் இன்ஸ்டிடியூட் விசயத்தில் நிதி பங்கீட்டை மாநில அரசு உறுதிபடுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது .
இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து தொடர்பாக துணைவேந்தர் எம்.கே. சுரப்பா கடந்த வாரம் தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பரிந்துரை குழு உறுப்பினர்களை சந்தித்தார்.
அப்போது, பல்கலைக்கழகம் நிதி அடிப்படையில் வலுவான நிலையில் இருப்பதாகவும், மாநிலத்தை அரசை சார்ந்திராமல் 500 கோடி ரூபாய் நிபந்தனை மானியத்தை பல்கலைக்கழகம் நிறைவேற்றும என விவரித்தார்.
இருப்பினும், அண்ணா பல்கலைக்கலகம் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக முதல்வரால் அமைக்கப்பட்ட பரிந்துரை குழு இன்னும் தனது அறிக்கையை சமர்பிக்கவில்லை.
முன்னதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.வி. அன்பழகன் இதுகுறித்து கூறுகையில், " ஊரடங்கு காரணமாக பரிந்துரை குழு ஆலோசனை நடத்தவில்லை. சிறப்பு அந்தஸ்து தொடர்பான முடிவை அவசரமாக எடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.