சமூக நலத் துறை வேலை; 20 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 20 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம; தேர்வு முறை இதுதான்!

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 20 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம; தேர்வு முறை இதுதான்!

author-image
Ambikapathi Karuppaiah
New Update
Jobs women

சென்னை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு திட்ட சேவைகள் துறையின் கீழ் அமைக்கப்பட்ட குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்க்-ல் ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

திட்ட ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: சமூகப் பணி/ சமூகவியல்/ குழந்தைகள் மேம்பாடு/ மனித பொது உரிமைகள் நிர்வாகம்/ உளவியல்/ மனநல மருத்துவம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வளம் ஆகிய படிப்புகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 28,000

மேற்பார்வையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: சமூகப்பணி/ கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ சமூகவியல்/ சமூக அறிவியல் ஆகியவற்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 21,000

ஆற்றுப்படுத்துநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: சமூகப் பணி/ சமூகவியல்/ உளவியல்/ பொது சுகாதாரம் ஆகிய படிப்புகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 23,000

வழக்குப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 18,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://chennai.nic.in/applications-are-invited-for-contractual-positions-at-the-child-help-center-and-railway-kiosk-in-chennai-district/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை தெற்கு எண் – 1, புதுத்தெரு, வணிக வளாகம், GCC முதல் மாடி, ஆலந்தூர், சென்னை - 600016

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.10.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Chennai Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: