/indian-express-tamil/media/media_files/cSQdpDmoaZjjeatvGDNv.jpg)
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படும் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பாதுகாப்பாளர் மற்றும் பன்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பாதுகாப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: பள்ளிப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பாளராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
பன்முக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: ஏதாவது அலுவலகத்தில் பராமரிப்பாளராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2025/10/17600942513755.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை - 600001
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.