CISF Recruitment 2019 : மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் (சி.ஆர்.பி.எஃப்) ஆட்சேர்ப்பு விவரங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தகுதியுள்ள ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். அதற்கான நடைமுறைகள் @cisf.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். இந்த இணையதளத்தில் சம்பளம், கல்வித் தகுதி, வயது, உயரம், மற்றும் எப்படி விண்ணபிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டு உள்ளது.
தலைமை கான்ஸ்டபிள் மற்றும் கான்ஸ்டபிள் பதவிக்கு தகுதியான ஆண்/பெண் இருபாலரும் தேவைப்படுகிறார்கள்.
Central Industrial Security Force Released 429 Jobs for Head Constable Posts: விவரங்கள் முழு விபரம்!
தேர்வு செய்யப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த நடைமுறைகல் அனைத்தும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு நடைமுறைக்கு உட்பட்டது.
விண்ணப்பம் இணைப்பு:
இணையதளம் மூலம் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்துக்கொள்ளவும். அதை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்ககளை இணைத்து இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்.
கடைசி தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
பணி : தலைமை கான்ஸ்டபிள்/கான்ஸ்டபிள்
நிர்வாகம் : மத்திய அரசு
காலிப்பணியிடம் : மொத்தம் 429
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100 மற்றும் SC/ST பிரிவினருக்கு ஆண்/பெண் இருபாலருக்கும் இலவசம்
விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 21 முதல் விநியோகிக்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி: பிப்ரவரி 20, 2019.