/indian-express-tamil/media/media_files/AAWFifKommQ86xgQEpkN.jpg)
தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ முதன்மைத் தேர்வு (JEE Mains) இரண்டு அமர்வுகளுக்கான தேர்வுத் தேதிகளை வெளியிட்டுள்ள நிலையில், மாணவர்கள் செய்ய வேண்டிய முக்கிய விபரங்களை இப்போது பார்ப்போம்.
தேசிய தேர்வு முகமை (NTA) ஜே.இ.இ முதன்மை தேர்வுக்கான முதல் மற்றும் இரண்டாவது அமர்வு தேர்வு அட்டவணையை அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஜே.இ.இ முதன்மை தேர்வு 2026 இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும் - முதலாவது அமர்வு ஜனவரி 2026 இல் மற்றும் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 2026 இல் நடைபெறும். ஜே.இ.இ முதன்மை தேர்வு முதல் அமர்வு தற்காலிகமாக ஜனவரி 21 முதல் 30 வரை திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 1 முதல் 10 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜே.இ.இ முதன்மைத் தேர்வுக்கு மாணவர்கள் செய்ய வேண்டிய முக்கிய விபரங்களை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார். அதன்படி, முதல் அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு அக்டோபர் இறுதியில் தொடங்கும். இரண்டாம் அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு 2026 ஜனவரியில் தொடங்கும்.
விண்ணப்பம் செய்ய மாணவரின் பெயர் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவேளை பெயர் ஒரே மாதிரியாக இல்லை என்றால், தேசிய தேர்வு முகமை ஒரு வழிமுறையை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பெயர் மற்றும் இனிசியல் இருக்கும் நிலையில், பிறப்பு சான்றிதழில் பெயர் மற்றும் தந்தை பெயர் இணைந்து இருந்தால், பெரிய பிரச்னை இல்லை. ஆனால் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ளது போல், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் கார்டு, சாதிச் சான்றிதழ் ஆகியவற்றிலும் இருக்க வேண்டும்.
மாணவர்களும் பெற்றோர்களும் இவற்றை சரிபார்த்து, பொருத்தமாக இல்லை என்றால், உடனே அதற்கு ஏற்ப மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.