சென்னை பல்கலைக்கழகம் வரும் செப்டம்பர் 13 மற்றும் 14 -ம் தேதி மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
செப்டம்பர் 13-ம் தேதி தொலை தூரக் கல்வியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், தொலை தூரக் கல்வி படித்து முடித்த மாணவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். செப்டம்பர் 14-ம் தேதி பலகலைக்கழகம் மற்றும் அதன் சார்பு கல்லூரிகளில் படித்து முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
பல்கலைக்கழக மாணவர்களின் ஆலோசனைக் குழுவும்(USAB), பலகலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனமும்( IDE) ஜஸ்ட் டயல் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த விருக்கின்றனர்.
சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்த முகாம் நடத்தப் படுகிறது.
மேலும், விவரங்களுக்கு
இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள QR ஸ்கேன் செய்து மாணவர்கள் பது செய்யலாம். அப்படி இல்லை என்றால் செப்டம்பர் 13-ம் தேதி காலை 8 மணிக்கு நேரடியாக சென்று பதிவு செய்ய வேண்டும்.