நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 30 மாணவர்கள் மற்றும் 2 பல்கலைகழக ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மீன்வள பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு இருந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது. குறிப்பாக குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பணம் கொடுத்து பட்டப்படிப்புகளில் சேர்ந்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், மீன்வளத்துறை ஆணையர் பழனிச்சாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை அடிப்படையில் நாகை மின்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 30 மாணவர்கள் மற்றும் 2 பல்கலைக்கழக ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“