Advertisment

எம்.பி.பி.எஸ் அட்மிஷன் ரவுண்ட் 1: மத்திய கோட்டா வேண்டாமா? திங்கட் கிழமைக்குள் முடிவு எடுங்க!

மருத்துவ கவுன்சிலிங்; அகில இந்திய ஒதுக்கீட்டை உறுதி செய்ய திங்கட்கிழமை வரை மாணவர்களுக்கு அவகாசம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MBBS - BDS course counselling date and cut-off Mark in TN Tamil News

மருத்துவ படிப்பு

நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு சனிக்கிழமை MBBS இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களை திங்கட்கிழமைக்குள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நாடு முழுவதும் உள்ள மருத்துவ இடங்களுக்கு மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி (எம்.சி.சி) கவுன்சிலிங் நடத்தி வருகிறது. AIIMS, JIPMER மற்றும் இந்திய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களுக்கு 15% அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு MCC இடங்களை ஒதுக்குகிறது.

இதையும் படியுங்கள்: NEET UG 2023: தமிழக கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் அட்மிஷன்; முதல் ரவுண்டில் எகிறிய கட் ஆஃப்

முதல் சுற்று கவுன்சிலிங் முடிவடைந்துள்ள நிலையில், தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் இடங்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் எதிர்ப்பார்த்த கல்லூரிகளில் ஒதுக்கீடு பெறாதவர்கள், தங்கள் ஒதுக்கீட்டை திரும்ப ஒப்படைக்க முயன்றனர். ஆனால் MCC போர்ட்டல் அவர்களின் இருக்கைகளை ஒப்படைக்கும் விருப்பத்தை மூடிவிட்டது. இருப்பினும் தற்போது அவகாசம் அளித்துள்ளது.

மாநில அரசின் முதல் சுற்றில் கலந்துக் கொண்ட பெரும்பாலான மாணவர்களுக்கு தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள உள்ளூர் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களில் பலர் மத்திய அரசின் சுற்றில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டுக்கொடுக்க விரும்பினர், குறிப்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்த பலர் ஒதுக்கீட்டை திரும்ப ஒப்படைக்க முயன்றனர். ஆனால் கல்லூரிகள் சேர்க்கையை ரத்து செய்ய மறுத்துவிட்டன. அதேநேரம், மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களைப் பெற்ற மாணவர்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களை ரத்து செய்ய ஆர்வமாக உள்ளனர் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், சில மாநிலங்கள் மாநில கவுன்சிலிங்கின் சுற்று-1 முடிவுகளை நேற்று அறிவித்ததால், சனிக்கிழமை பிற்பகுதியில், MCC ஆனது 2023 ஆம் ஆண்டு இளங்கலை கவுன்சிலிங்கின் சுற்று-1 இல் ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து ரத்து செய்ய விண்ணப்பதாரர்கள் / நிறுவனங்களிடமிருந்து பல கோரிக்கைகளைப் பெற்றதாகக் கூறியது. இதனையடுத்து MCC மாணவர்கள் திங்கட்கிழமை, மதியம் 3 மணி வரை சுற்று-1 ஒதுக்கீட்டை ரத்து செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment